News June 17, 2024
நாளை 17ஆவது தவணை ₹2000-ஐ விடுவிக்கிறார் மோடி

வாரணாசி தொகுதியில் வென்ற பிறகு, முதல்முறையாக நாளை தொகுதி மக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதன்பின், அங்கு நடைபெறும் விழாவில், பிஎம் கிசான் திட்டத்தின் 17ஆவது தவணையை விடுவிக்கிறார். பிஎம் கிசான் திட்டத்தில் 9.26 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தலா ₹2000 தொகையை பெறுவார்கள். மேலும், கிருஷி சாகிஸ் பயிற்சி அளிக்கப்பட்ட 30,000 சுயஉதவிக் குழுக்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறார்.
Similar News
News March 13, 2026
ஒரே இரவில் மாற்றம்.. அதிமுக கூட்டணியில் இணைந்தார்

தென்மாவட்ட அரசியலில் செல்வாக்குள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 90-களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக உருவெடுத்த டாக்டர் சேதுராமனுக்கு, தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. நேற்று இரவு EPS-ஐ நேரில் சந்தித்த சேதுராமன், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
நெருங்கும் தேர்தல்.. திமுக முக்கிய முன்னெடுப்பு

மார்ச் 15-ல் திமுக மா.செ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் பேரவை <<19359637>>தேர்தல் தேதி<<>> அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால், தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும், பரப்புரை திட்டங்களை வகுக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.
News March 13, 2026
அபிஷேக் போல பந்த் மாறுவாரா?

கடந்த IPL-ல் LSG கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் சிரமப்பட்டார். இதை சரிசெய்ய யுவராஜிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் 4 நாட்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி நடந்ததாக தகவல். இதற்குமுன் அபிஷேக், கில் போன்ற இளம்வீரர்களை யுவராஜ் உருவாக்கியுள்ளார். அதேபோல் பந்த், மேலும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


