News March 26, 2025
எப்போது தேர்தல் நடந்தாலும் மோடியே பிரதமர்: ஓபிஎஸ்

இந்திய நாட்டின் புகழை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது ஆட்சி திறன் காரணமாக இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை முறை தேர்தல் வந்தாலும், பிரதமராக மோடியே வருவார் என்றும் தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: எஸ்ஐஆர் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீரா ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சீராய்வு எஸ்ஐஆர் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் அலுவலர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
News December 13, 2025
FLASH: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

தங்கம், வெள்ளி விலை இந்த வாரத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், சென்னையில் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹98,960 ஆக உள்ளது. இது கடந்த வாரத்துடன் (டிச.6-ல் 1 சவரன் ₹96,320) ஒப்பிடுகையில் ₹2,640 அதிகமாகும். தங்கத்திற்கு சற்றும் சளைக்காமல், வெள்ளி விலை இந்த வாரத்தில் மட்டும் ₹11,000 அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிலோ வெள்ளி ₹2.10 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது.
News December 13, 2025
இது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: ராகுல்

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்., தலைமையிலான UDF கூட்டணி கணிசமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இது ஒரு தீர்க்கமான தீர்ப்பு என ராகுல் காந்தி கூறியுள்ளார். கேரளாவில் UDF மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான சிறப்பான அறிகுறியாக இந்த தேர்தல் முடிவு உள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல், இது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


