News May 15, 2024
2029 வரை மோடியே பிரதமராக தொடர்வார்: அமித் ஷா

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின், ஏதோ வழக்கமான தீர்ப்பு அல்ல என்றும், சிறப்பு கவனிப்பு என நாட்டில் பலரும் நம்புவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு கெட்ட செய்தி இருப்பதாக கூறிய அவர், 2029 வரையும், அதன்பின்பும் பிரதமர் மோடி தான் தங்களை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷாவே அடுத்த பிரதமராக்கப்படுவார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
Similar News
News October 19, 2025
JEE மெயின் 2026 தேர்வு அறிவிப்பு வெளியானது

2026-ம் ஆண்டுக்கான JEE மெயின் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. முதல்கட்ட தேர்வுக்கு இம்மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வானது ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News October 19, 2025
ஒரே நாளில் உயரமாகி, மீண்டும் குள்ளமாவீங்க!

நீங்கள் ஒரே நாளில் உயரமாகவும், குள்ளமாகவும் ஆகுறீங்க என சொன்னால் நம்பமுடிகிறதா? நாள் முழுக்க, உட்கார்ந்தோ / நடந்துகொண்டோ இருக்கும்போது புவியீர்ப்பு விசையால் உங்கள் முதுகெலும்புக்கு இடையில் இருக்கும் Cartilages சுருங்குகிறது. ஆனால் இரவில் தூங்கும்போது உங்கள் முதுகெலும்பு Rest-ல் இருப்பதால், Catilage-கள் விரிவடைகிறது. இதனால், காலையில் எழும்போது 1 CM உயரமாவீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.
News October 19, 2025
பட்டா, சிட்டா ஆவணம்.. தமிழக அரசு புதிய வசதி

இறந்தவர்களின் பெயர்களை பட்டாவில் இருந்து நீக்குவதற்கும், புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்கவும், அண்மையில் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் A TN nilam citizen portal மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். SHARE IT.