News May 15, 2024

2029 வரை மோடியே பிரதமராக தொடர்வார்: அமித் ஷா

image

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின், ஏதோ வழக்கமான தீர்ப்பு அல்ல என்றும், சிறப்பு கவனிப்பு என நாட்டில் பலரும் நம்புவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு கெட்ட செய்தி இருப்பதாக கூறிய அவர், 2029 வரையும், அதன்பின்பும் பிரதமர் மோடி தான் தங்களை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷாவே அடுத்த பிரதமராக்கப்படுவார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

Similar News

News November 17, 2025

ஷேக் ஹசீனா மீதான 5 குற்றச்சாட்டுகள்

image

ஷேக் ஹசீனா மீதான பின்வரும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக, அந்நாட்டு <<18310332>>தீர்ப்பாயம் அறிவித்துள்ளது<<>>. அந்த குற்றச்சாட்டுகள்: *பொதுமக்களை மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்த, ஒடுக்கிய பாதுகாப்பு படையினர் & அவாமி லீக் கட்சியினரை தடுக்க தவறியது *போராடிய மாணவர்களை தாக்க ஆபத்தான ஆயுதங்கள் பயன்படுத்த ஆணையிட்டது *மாணவர் பேகம் ரோக்கியா கொலை, 11 போராட்டக்காரர்கள் கொலையில் ஆதரவாக செயல்பட்டது ஆகியவை.

News November 17, 2025

இதற்கு சாத்தியமா? நீங்களே சொல்லுங்க!

image

கான்பூரை சேர்ந்த இரட்டையர்களுக்கு கைரேகை, ரெட்டினா (கண் விழி) ஆகியவை ஒரே மாதிரி உள்ளதாம். இதனால் ஆதார் பயோமெட்ரிக்கில் ஒருவருடைய கைரேகை பதிவானதும், மற்றொருவரின் தரவுகள் deactivate ஆகிவிடுகிறதாம். இரட்டையர்களுக்கு கைரேகை, ரெட்டினா ஆகியவை 55-74% வரையே ஒரே மாதிரி இருக்க வாய்ப்புள்ளதாக அறிவியல் கூறுகிறது. எனவே, இது டெக்னிக்கல் மிஸ்டேக் என்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

News November 17, 2025

சற்றுமுன்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்

image

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அமைச்சரவை கலைப்பு தீர்மானத்தை ஆளுநரிடம் நிதிஷ்குமார் வழங்கினார். நாளை நடைபெறவிருக்கும் ஐக்கிய ஜனதா தளம் MLA-க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் சட்டமன்ற குழு தலைவராக தேர்வாகிறார். அதன்பின் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் மீண்டும் நவ.20-ம் தேதி முதல்வர் பதவியை ஏற்பார் என கூறப்படுகிறது.

error: Content is protected !!