News May 15, 2024
2029 வரை மோடியே பிரதமராக தொடர்வார்: அமித் ஷா

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின், ஏதோ வழக்கமான தீர்ப்பு அல்ல என்றும், சிறப்பு கவனிப்பு என நாட்டில் பலரும் நம்புவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு கெட்ட செய்தி இருப்பதாக கூறிய அவர், 2029 வரையும், அதன்பின்பும் பிரதமர் மோடி தான் தங்களை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷாவே அடுத்த பிரதமராக்கப்படுவார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
Similar News
News December 6, 2025
வேலை நேரம் முடிந்த பிறகும் வேலை செய்ய சொன்னால்..?

வேலை நேரம் முடிந்த பிறகும், Client உடன் பேசுங்கள், இந்த Task-ஐ செய்யுங்கள் என TL, மேனஜர்களிடம் இருந்து ஊழியர்களுக்கு அழைப்புகள் வருவது வழக்கம். இதுபோன்று வரும் இ-மெயில்கள், அழைப்புகளை துண்டிக்கும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்கும் வகையில், NCP MP சுப்ரியா சுலே லோக்சபாவில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சட்டமாகும். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமா?
News December 6, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
News December 6, 2025
சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


