News May 15, 2024
2029 வரை மோடியே பிரதமராக தொடர்வார்: அமித் ஷா

கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின், ஏதோ வழக்கமான தீர்ப்பு அல்ல என்றும், சிறப்பு கவனிப்பு என நாட்டில் பலரும் நம்புவதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலுக்கு கெட்ட செய்தி இருப்பதாக கூறிய அவர், 2029 வரையும், அதன்பின்பும் பிரதமர் மோடி தான் தங்களை வழிநடத்துவார் எனவும் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷாவே அடுத்த பிரதமராக்கப்படுவார் என கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
Similar News
News November 20, 2025
டெல்லிக்கு பயணிப்பதற்கு கூட அச்சமாக உள்ளது: உமர்

J&K பதிவெண் கொண்ட வாகனத்தில் டெல்லிக்கு பயணிப்பதற்கு கூட தற்போது அச்சமாக இருப்பதாக அம்மாநில CM உமர் அப்துல்லா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லி கார் குண்டுவெடிப்பிற்கு வெகுசிலரே காரணம், ஆனால் ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் அந்த பழியை சுமப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஜம்மு & காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
ஒரு செல்ஃபியில் பல லட்சம் கோடி!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஏற்பாடு செய்த விருந்தில், <<18338177>>ரொனால்டோ<<>> நேற்று கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக எலான் மஸ்க், OpenAI இணை நிறுவனர் கிரெக் புரோக்மேன், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. இந்த செல்ஃபியில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடியை தாண்டும்.
News November 20, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு… தொண்டர்கள் மகிழ்ச்சி

கரூர் துயருக்கு பிறகு, மீண்டும் விஜய் பரப்புரையை தொடங்கவுள்ளார். டிச.4-ல் சேலத்தில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக தரப்பில் SP-யிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், அனுமதி வழங்குவது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தொடங்கவுள்ள பரப்புரை விஜய்யின் அரசியலை தீவிரப்படுத்துமா?


