News May 30, 2024
மோடி 3ஆவது முறையாக பிரதமராவது உறுதி: ராமதாஸ்

மோடி தமிழர்களை அவமதிக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் பிரசாரம் செய்த போது, அம்மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி வி.கே.பாண்டியனைதான் குறிப்பிட்டதாக கூறிய அவர், தனி நபரைப் பற்றி பேசுவது ஒட்டுமொத்த தமிழர்களை அவமதிப்பதாக கருத முடியாது என்றார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்று மோடி 3ஆவது முறையாக பிரதமராவது உறுதி எனத் தெரிவித்தார்.
Similar News
News August 22, 2025
Fantasy App-களை கைவிடும் BCCI?

IPL-க்கு MY 11 CIRCLE App ஸ்பான்ஸர் செய்து வருகிறது. தற்போது கொண்டுவரப்பட்ட ஆன்லைன் கேமிங் மசோதாவால், இந்த ஆப் முடங்கும் சூழலில் உள்ளது. இதுபற்றி பேசிய BCCI செயலாளர் தேவஜித் சைகியா, இந்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டே BCCI செயல்படும் என்றார். அரசு உத்தரவிட்டால், கடந்த காலங்களில் சிகரெட், மது நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஷிப்பை ரத்து செய்தது போல், இந்த நிறுவனத்தின் ஸ்பான்ஷர்ஷிப்பும் ரத்தாகும் என்றார்.
News August 22, 2025
கூட்டணி இல்லை.. அதிமுக அதிகாரப்பூர்வ முடிவு

விஜய் உடன் கூட்டணி என்ற முடிவை அதிமுக கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மதுரை தவெக மாநாட்டில் அதிமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர், சினிமா வசனம் மட்டும் பேசி CM ஆக முடியாது என EPS, விஜய்க்கு பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக ADMK மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது கழகத்தை விமர்சிக்கும் யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் EPS உறுதியாக உள்ளார் என திட்டவட்டமாக கூறினார். உங்கள் கருத்து?
News August 22, 2025
அன்பை கொடுத்து யாரும் ஏமாறுவதில்லை..

நான் மற்றவர்களுக்கு நல்லதே நினைத்தாலும், எனக்கு நல்லது நடக்க மாட்டேங்குது. பல இடங்களில் ஏமாளியாக நிற்கிறேன், ஈசியாக ஏமாற்றப்படுகிறேன் என புலம்புபவரா? ஒன்றே ஒன்றை மனதில் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு அன்பை கொடுத்து ஏமாற்றபட்டால், கொஞ்சமும் மனம் சஞ்சலம் அடைய தேவையில்லை. ஏமாற்றப்படுவது நீங்கள் அல்ல.. அவர்கள்தான். இந்த உலகிற்கு என்ன கொடுக்கிறீர்களோ, அதுவே திரும்ப வரும். அன்பை மட்டுமே பகிர்வோம்.