News April 15, 2024
தமிழில் உரையைத் தொடங்கிய மோடி

‘என் இனிய சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. நெல்லையில் தேர்தல் கூட்டத்தில் பேசிவரும் அவர், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜகவிற்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து INDIA கூட்டணிக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
Ex CM வங்கி கணக்கை ஹேக் செய்து ₹3 லட்சம் திருட்டு

கர்நாடகா Ex CM சதானந்த கவுடாவிடம் சைபர் கிரைம் கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. அவரது 3 வங்கி கணக்கை ஹேக் செய்த மர்ம கும்பல், அதில் இருந்து ₹3 லட்சத்தை திருடியுள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீஸில் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே சில நாட்கள் முன் கர்நாடக பிரபல நடிகரும் இயக்குநருமான <<17721322>>உபேந்திரா <<>>மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
மூலிகை: மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூ!

சித்த மருத்துவர்களின் அறிவுரைப்படி,
*இலுப்பைப்பூவை தினசரி சாப்பிட்டால், இரும்புச்சத்து கிடைக்கும்.
*இலுப்பைப்பூவை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரை அருந்தி வந்தால் இருமல், நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நீங்கும்.
*இலுப்பைப்பூவைக் காயவைத்து இடித்து வெல்லத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டான மாதவிலக்குக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் நீங்கும். இதனை நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 18, 2025
அதிமுகவில் இணைந்தனர்

2026 தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சியும், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மலையில், முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுகவின் மூத்த அமைச்சரான எ.வ.வேலுவின் கோட்டையாக தி.மலை இருப்பது குறிப்பிடத்தக்கது.