News April 15, 2024
தமிழில் உரையைத் தொடங்கிய மோடி

‘என் இனிய சகோதர, சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் உரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி. நெல்லையில் தேர்தல் கூட்டத்தில் பேசிவரும் அவர், கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பாஜக தேர்தல் அறிக்கையில் மீனவர்கள், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பாஜகவிற்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து INDIA கூட்டணிக்கு தூக்கம் தொலைந்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
அதிமுக ஒருங்கிணைப்பு; பாஜகவின் புதிய ஸ்கெட்ச்!

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதற்கு, EPS ஒத்துவராததால் பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பழைய பிளானுக்கு பதிலாக, தற்போது பாஜக புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பாஜகவுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் சிலவற்றை பிரிந்திருப்பவர்களுக்கு வழங்கலாம் என திட்டம் இருக்கிறதாம். இதனாலேயே அதிமுகவிடம் பாஜக 50 சீட்களை கேட்கிறது எனவும் கூறுகின்றனர்.
News November 22, 2025
தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
News November 22, 2025
தோனிக்கு அடுத்து ரிஷப் பண்ட்; எதுலன்னு பாருங்க..

தோனிக்கு அடுத்தபடியாக இந்திய டெஸ்ட் அணியை கேப்டனாக வழிநடத்தும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் தெ.ஆ., அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு ரிஷப் பண்டுக்கு கிடைத்துள்ளது. 2008 முதல் 2014 வரை சுமார் 60 டெஸ்ட் போட்டிகளை தோனி வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


