News April 13, 2024

தமிழர்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் மோடி

image

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் 30 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட வாழ்த்து அட்டை அனுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த குரோதி வருட புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் என அந்த வாழ்த்து அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 8, 2025

நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்

image

தேசிய பாடலான வந்தேமாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. லோக்சபாவில் மதியம் 12 மணிக்கு விவாதத்தை தொடங்கி வைத்து PM மோடி உரையாற்ற உள்ளார். ராஜ்யசபாவில் அமித்ஷா விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு, கலாச்சார முக்கியத்துவம் குறித்து MP-க்கள் பேச உள்ளனர்.

News December 8, 2025

100 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு

image

2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் 100 மொழிகளில் திருக்குறளை கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுவரை 25 இந்திய மொழிகளிலும், 9 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாள்களில் ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

World Roundup: பெத்தலேகத்தில் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரம்

image

*தென்னாப்பிரிக்காவில் பாரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி. *2027-க்குள் UBS நிறுவனம் உலகம் முழுவதும் 10,000 பேரை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக தகவல். *காஸா விவகாரம் தொடர்பாக டிரம்புடன் இஸ்ரேல் PM பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல். *2 ஆண்டுகளுக்கு பிறகு பெத்தலேகத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம் ஒளிரூட்டப்பட்டுள்ளது. *அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை ரஷ்யா வரவேற்றுள்ளது.

error: Content is protected !!