News March 18, 2024

அஞ்சலி செலுத்திய மோடி

image

கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 1998 பிப்.14ஆம் தேதி கோவையில் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 11 இடங்களில் 12 கி.மீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன. அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.

Similar News

News November 28, 2025

வேலூர்: சற்று நேரத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!

image

வேலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று நவம்பர் 28-ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில், அரசு அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே 
வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 28, 2025

அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. உறுதி செய்தார்!

image

CM வேட்பாளர் விஜய் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போது வரை தவெக உள்ளது. செங்கோட்டையன் கட்சியில் சேருவதற்கு முன்பு விஜய்யிடம் பேசியபோதும், இதே நிலையில் நீடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே திமுகவும், அதிமுகவும் ஒன்று என நேற்று அவர் பேசியிருந்தார். இதனால், அதிமுக கூட்டணியில் விஜய் இணையலாம் என்ற பேச்சுகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.

News November 28, 2025

உக்ரைன்-ரஷ்யா போர்: அடம் பிடிக்கும் புடின்

image

உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட <<18381416>>திருத்தப்பட்ட அமைதி திட்டத்தை<<>> புடின் நிராகரித்துள்ளார். போர் நிறுத்தப்பட வேண்டுமெனில், உக்ரைன் வசம் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை கண்டிப்பாக ரஷ்யாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். புடினின் இந்த பிடிவாதத்தால், போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இழுபறியாகவே நீடித்து வருகிறது.

error: Content is protected !!