News March 18, 2024
அஞ்சலி செலுத்திய மோடி

கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 1998 பிப்.14ஆம் தேதி கோவையில் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 11 இடங்களில் 12 கி.மீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன. அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.
Similar News
News January 14, 2026
ராசிபுரம் மாணவிக்கு பாலியல் வன்முறை!

ராசிபுரத்தை அடுத்த தேங்கல்பாளையம் தட்டையான்குட்டை புதூரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் (40). இவா் ஜவ்வரிசி உற்பத்தி ஆலையில் தொழிலாளியாக உள்ளாா். இவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினா் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து போலீஸாா் சிலம்பரசனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
News January 14, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹880 உயர்வு

தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று(ஜன.14) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹110 உயர்ந்து ₹13,280-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹880 அதிகரித்து ₹1,06,240-க்கு விற்பனையாகிறது. <<18851994>>சர்வதேச சந்தையில் காலையில்<<>> சற்று குறைந்த தங்கம் தற்போது மீண்டும் ஏறுமுகத்தில் இருப்பதால் இந்திய சந்தையில் தங்கம் விலை உயர்வைக் கண்டுள்ளது.
News January 14, 2026
PAK-க்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!

கடந்த சில நாள்களாக எல்லையில் பாக்., <<18851779>>ட்ரோன்<<>> அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதனை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்துமோ என்ற அச்சத்தில் பாக்., ட்ரோன்களை ஏவுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சீனா, பாக்.,-க்கு போட்டியாக இந்தியா விரைவில் பிரத்யேக ‘ராக்கெட்-ஏவுகணை படை’ ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


