News March 18, 2024
அஞ்சலி செலுத்திய மோடி

கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 1998 பிப்.14ஆம் தேதி கோவையில் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 11 இடங்களில் 12 கி.மீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடித்தன. அல் உம்மா என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுக்கூறத்தக்கது.
Similar News
News November 24, 2025
காங்., படுதோல்விக்கு இதுவே காரணம்: அண்ணாமலை

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை, இந்தியா முழுதும் உள்ள அனைத்து மக்களிடமும் இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். இதே மனநிலைதான் பிஹாரில் இருந்ததாகவும், அதனால்தான் NDA கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிஹாரில் காங்கிரஸுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதே நிலைதான் தமிழகத்திலும் நடக்கும் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.
News November 24, 2025
ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


