News May 30, 2024

குமரியில் மோடி தியானம்: பின்னணி இதுவா?(1/3)

image

இந்தியாவின் ஆன்மிக தலைவர்களில் ஒருவரான விவேகானந்தர், குமரிக்கு 1892இல் வந்து தற்போது அவர் பெயரில் உள்ள மண்டபம் அமைந்துள்ள பாறை மீது 3 நாள்கள் தியானம் செய்தார். பிறகு 1893 சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று பேசி உலகப் புகழ்பெற்றார். இதனால் குமரியில் அவர் பெயரில் விவேகானந்தர் நினைவிடம் கட்டப்பட்டது. இன்று அங்கு வரும் மோடி, அந்த பாறை மீது அமர்ந்து தியானம் செய்யவுள்ளார்.

Similar News

News August 22, 2025

டெல்லியில் தெருநாய்கள் நிலை? SC-ல் இன்று முடிவு

image

டெல்லியில் தெருநாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என SC அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் 3 நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆக.,14-ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

News August 22, 2025

கபில்தேவ் பொன்மொழிகள்

image

*நான் எதிர்மறையான விஷயங்களைப் பார்ப்பதில்லை. தவறுகளைத் தாண்டி முன்னோக்கிப் பாருங்கள்.
* வெற்றி பெறுவதற்கான பசி இறக்கக்கூடாது. பசி பெரிதாக இருக்க வேண்டும்.
* நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால், ஏதாவது சாதிக்க விரும்பினால், உங்களிடம் இல்லாததைப் பற்றி எப்போதும் யோசித்துக்கொண்டிருக்க முடியாது.
* உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள். அதுதான் மகத்துவத்தை அடைவதற்கான முதல் படி.

News August 22, 2025

அதிமுக – பாஜகவுடன் தவெக மறைமுக கூட்டணி: வன்னியரசு

image

அதிமுக – பாஜக கூட்டணியின் மறைமுக பார்ட்னராக விஜய் செயல்படுகிறார் என வன்னியரசு விமர்சித்துள்ளார். திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக கூட்டணி என குற்றச்சாட்டு வைக்கும் விஜய், அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றார். அதை செய்யாமல் இபிஎஸ் முன்மொழிந்ததை வழிமொழிந்தனர் மூலம் அதிமுகவுடன் தவெக மறைமுக கூட்டணி வைத்திருப்பது அம்பலமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!