News April 9, 2024
மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் மோடி

பிரதமர் மோடி மக்களை தவறாக வழிநடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கிறது. 10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை கூறுவதை விடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து பிரதமர் மோடி பேசி வருகிறார். இதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார்.
Similar News
News November 6, 2025
ரஜினிக்கு கமல் எழுதிய லெட்டர்… மடல்… இல்ல கடுதாசி!

சினிமாவில் ரஜினியுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தி, ரஜினிக்கு கமல் X-ல் பதிவிட்டுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. அதில், ‘அன்புடை ரஜினி, காற்றால் அலைந்த நம்மை இறக்கி இறுக்கி தனதாக்கியது, சிகரத்தின் இரு பனிப் பாறைகள் உருகிவழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நமைக் காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம் மகிழ்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 6, 2025
ராசி பலன்கள்(06.11.2025)

➤மேஷம் – புகழ் ➤ரிஷபம் – பொறுமை ➤மிதுனம் – விவேகம் ➤கடகம் – வாழ்வு ➤சிம்மம் – தடங்கல் ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – தோல்வி ➤விருச்சிகம் – கவனம் ➤தனுசு – சுகம் ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – சுபம் ➤மீனம் – வெற்றி
News November 6, 2025
பழிவாங்குகிறதா பாம்பு? ஒரு மாதத்தில் 7 முறை கடி

தெலங்கானாவில் 28 வயதான இளைஞரை, ஒரு மாதத்தில் 7 முறை பாம்பு கடித்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்முறை கடித்ததும் உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு உயிர்பிழைத்த அந்நபர் வீட்டுக்கு திரும்பியதும், மீண்டும் மீண்டும் பாம்பு கடித்துள்ளது. இதில் பீதியடைந்த அந்நபர், பாம்பு தன்னை பழிவாங்குவதாக எண்ணி புலம்பி வருகிறார். உண்மையில் சில வகை பாம்புகள் பழிவாங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


