News February 10, 2025
மணிப்பூர் வன்முறைக்கு மோடியே காரணம்: கனிமொழி

மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுமே காரணம் என திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே பிரேன்சிங் பதவி விலகியுள்ளார் என்றார். மணிப்பூரில் அமைதியும், நிம்மதியும் ஏற்பட, இனியாவது பாஜக அரசு முயற்சிக்க வேண்டும் என்றும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News September 9, 2025
செங்கோட்டையன் டெல்லி சென்றது இதற்குத் தானாம்!

மத்திய அமைச்சர்களை சந்தித்தது ஏன் என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஹரித்வார் போவதற்கு டெல்லிக்கு புறப்பட்ட தனக்கு, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க அனுமதி கிடைத்ததாக அவர் குறிப்பிட்டார். அப்போது, ஆபிஸ், கல்வி நிலையங்கள் செல்வோரின் வசதிக்கேற்ப ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தியதாக தெரிவித்தாா். ஹரித்வார் செல்லாமலேயே அவர் தமிழகம் திரும்பியுள்ளார்.
News September 9, 2025
நேபாளம் பற்றியெரிய இவர் தான் காரணம்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நாடே கலவர பூமியாக மாறியுள்ளது. இதற்கு வித்திட்டவர் யார் தெரியுமா? சுடன் குருங் என்ற 36 வயது நபர். இளைஞர்களை ஒருங்கிணைத்து ஹமி நேபாள் என்ற NGO-வை நடத்திவரும் இவர், மாணவர்களை திரட்டி போராட்டத்தை தொடங்கினார். சோஷியல் மீடியாவில் தீவிர பிரசாரம் செய்தது ஜென் Z இளைஞர்களை திரட்ட உதவியது. இவருக்கு மேற்கத்திய நிறுவனங்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
News September 9, 2025
BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல் நிறைவு

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இரு அவைகளிலும் மொத்தம் 782 MP-க்கள் உள்ள நிலையில், 392 வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார். NDA கூட்டணிக்கு இரு அவைகளிலும் சேர்த்து 422 MP-க்களின் ஆதரவு இருப்பதால், அதன் சார்பில் போட்டியிடும் சிபி ராதாகிருஷ்ணன் வெல்ல அதிக வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.