News April 15, 2024
8வது முறையாக இன்று தமிழகம் வருகிறார் மோடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று 8வது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.
Similar News
News December 14, 2025
ஜூஸ், பிஸ்கட், தண்ணீர், நொறுக்குத் தீனிகள் ரெடி!

தி.மலையில் மாலை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மண்டல மாநாட்டில் 1.30 லட்சம் பேருக்கு பிஸ்கட், ஜூஸ், கடலை பர்பி, மிக்சர் உள்ளிட்ட 9 பொருள்கள் அடங்கிய சிற்றுண்டி பை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக வடக்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்றைய மாநாட்டில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலிருந்து 91 தொகுதிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
News December 14, 2025
BREAKING: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அறிவிப்பு

நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயம் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில், ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும், அரசு திட்ட சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. MERA KYC, FACE RD ஆகிய ஆப்கள் மூலம் செல்போனிலேயே ரேஷன் கார்டு e-KYC-ஐ அப்டேட் செய்யலாம். இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனே முந்துங்கள்!
News December 14, 2025
தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் ஊரடங்கு!

கம்போடியாவின் <<18550033>>கோ கோங்<<>> மாகாணத்தின் மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தாய்லாந்தின் தென்கிழக்கு மாகாணமான டிராட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தீவுகள் தவிர்த்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கிழக்கு சாகியோ மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.


