News April 15, 2024
8வது முறையாக இன்று தமிழகம் வருகிறார் மோடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று 8வது முறையாக தமிழகம் வருகிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.10 மணிக்கு நெல்லை அம்பாசமுத்திரம் வருகிறார். அங்கு, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு அவர் வாக்கு சேகரிக்கிறார்.
Similar News
News December 23, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

பள்ளி மாணவர்களின் உற்சாகத்துக்கு இன்று எல்லையே கிடையாது. ஏனென்றால், 1 – 12 வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் இன்றுடன் அரையாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. நாளை (டிச.24) முதல் ஜன.4 வரை 12 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜன.5 அன்றே பள்ளிகள் திறக்கும். எனவே, விடுமுறையை கொண்டாட முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களுக்காக <<18631046>>சிறப்பு<<>> பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
News December 23, 2025
கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, மூலஸ்தானத்தின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை நமஸ்கரித்து பின்னர், தெய்வத்தை தரிசிக்க வேண்டும் என்பது ஆலய தரிசன விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.
News December 23, 2025
ஜெயிலர் 2 படத்தில் கேமியோ சற்று அதிகம்: சிவராஜ்குமார்

‘ஜெயிலர் 2’ படத்தில் தான் நடிப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார். ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், ஜனவரிக்குள் தனது பகுதி முடிவடையும் என்றும் அப்டேட் கொடுத்துள்ளார். முந்தைய பாகத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் உருவாகி வருவதாகவும், இதில் தனது ரோலின் நீளம் சற்று அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டிஸ்யூ சம்பவக்காரனாக சிவராஜ்குமாரை பார்க்க ரெடியா?


