News April 11, 2024
70 ஆண்டுகளாக முடியாததை மோடி முடித்து காட்டினார்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவே, பயங்கரவாதம் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளாக 370 சட்டப்பிரிவை ரத்து செய்ய காங்கிரசால் முடியவில்லை. பயங்கரவாதத்தின் மூலத்தை அடியோடு அழித்து, 370வது பிரிவை பிரதமர் மோடி நீக்கியதாக கூறிய அவர், அதனால் தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் நம்மை கண்டு பயந்து நடுங்குவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News April 25, 2025
போருக்கு தயாராகும் பாகிஸ்தான்!

இந்திய எல்லையில் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை பாக். ராணுவம் அதிகரித்து வருகிறது. பதுங்கு குழியில் இருந்து மட்டுமே கண்காணிக்கவும், ராவல்பிண்டியில் உள்ள 10 படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் தீவிர உஷார் நிலையில் இருக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய எல்லை பகுதி மட்டுமில்லாமல், சர்வதேச எல்லைகளான சியால்கோட், குஜ்ரன்வாலா பகுதிகளிலும் வீரர்களை அதிகரித்து வருகிறது.
News April 25, 2025
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்..!

▶ உண்மையான போருக்கு எதிரான ஒரு போரை தொடங்க வேண்டுமென்றால், அதனை குழந்தைகளிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். ▶ வன்முறையை விரும்பும் மனிதர்கள் பிற வன்முறையாளர்களால் கொல்லப்படுவதில்லை. அவர்களின் கொள்கையால்தான் கொல்லப்படுகிறார்கள். ▶ அரசியலுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவிப்பவர்களுக்கு மதம் பற்றி ஒன்றும் தெரியாது.
News April 25, 2025
பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய RR?

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணியும் கட்டாயமாக 8 போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனால், RR அணி 9 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வென்றுள்ளது. இதனால், எஞ்சிய 5 போட்டிகளில் வென்றாலும் அந்த அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது கடினம்தான். ஒருவேளை மற்ற அணிகளின் ரன்ரேட் குறைவாக இருந்தால் ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதுவும் ரொம்ப ரொம்ப கஷ்டமே.