News August 25, 2024
‘U’ டர்ன் அடிக்கும் மோடி அரசு: கார்கே

UPS திட்டத்தில் இருக்கும் ‘U’மத்திய அரசு, இதுவரை அடித்த ‘யு டர்ன்’களை குறிப்பிடுவதாக கார்கே கிண்டலடித்துள்ளார். வக்ஃபு மசோதா, லேட்டரல் என்ட்ரி, ஒளிபரப்பு மசோதா என மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின் வாங்குவதாக விமர்சித்த அவர், 140 கோடி இந்தியர்களை மோடி அரசிடம் இருந்து நிச்சயம் பாதுகாப்போம் என உறுதியளித்தார். ஜூன் 4 மக்களின் முடிவு, மோடி அரசின் அதிகார திமிரை வென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News December 25, 2025
தருமபுரி: தொப்பூர் அருகே தொடரும் விபத்து!

தருமபுரி, நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில், இன்று (டிச.25) விடியற்காலை காலை 2 மணி அளவில் கனரக வாகனா லாரி தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளாது. இதில், வாகன ஓட்டுநர் சிறிய காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு நேர்ந்தது. இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
பொங்கல் பரிசுடன் பணம்.. கடந்து வந்த பாதை

பொங்கல் பரிசு குறித்த அரசின் அறிவிப்பு தள்ளிப்போவதால் மக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2026 பொங்கல் பரிசுடன் ரொக்கம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தல் சமயம் என்பதால் பம்பர் ஆஃபராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கும் வழக்கம் எப்போது வந்தது எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News December 25, 2025
ஒரே வீட்டில் 44 பேர் எரித்துக் கொலை.. ஓயாத ஓலம்

1968-ல் விவசாய கூலியாக அரைப்படி நெல் அதிகம் கேட்டதற்காக, பண்ணையாரின் அடியாட்களால் ஒரு கிராமமே தாக்குதலுக்கு உள்ளானது. இதில் பயந்து ஓடிய பெண்கள், குழந்தைகள் தப்பித்துக்கொள்ள ராமையா என்பவரது வீட்டிற்குள் சென்றனர். ஆனால், அந்த வீடு தாழிடப்பட்டு தீ வைத்ததில் 44 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். இந்த ஆறாத வடுவான கீழ்வெண்மணி படுகொலை நடந்த தினமான இன்றும், அவர்களது அலறல்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.


