News May 31, 2024

இரண்டாம் நாள் தியானத்தை தொடர்கிறார் மோடி

image

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் தனது நேற்று மாலை 6:28 மணிக்கு தனது தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி இரவு வரை தொடர்ந்து தியானம் செய்தார். மோடி தியானத்தை தொடங்கியவுடன் அவருக்கு இளநீர் நீராகாரமாக வழங்கப்பட்டது. இன்று காலை பிரதமர் தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்குகிறார். தியானத்தைத் தொடங்கும் முன்னர் அவர், விவேகானந்தர் பாறையில் இருந்து சூரியோதயத்தைப் பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.

Similar News

News September 19, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 19, 2025

மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்கும் அஸ்வின்!

image

சிக்சர் மழை பொழியும் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடவுள்ளார். IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின், டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘ஹாங்காங் சூப்பர் சிக்சஸ்’ தொடரில் இந்திய அணியை அஸ்வின் வழிநடத்தவுள்ளார். அஸ்வின் விளையாடுவதால் இந்த தொடர் மேலும் பிரபலமடையும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

News September 19, 2025

மெதுவாக வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அபராதம்

image

புதுச்சேரியில் கோப்புகளை தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு உயரதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அம்மாநில CM ரங்கசாமி கூறி வந்த நிலையில், அபராதம் விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, காரணமின்றி கோப்புகளை தேக்கி வைத்திருக்கும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ₹250 அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டிலும் இதை கொண்டு வரலாமா?

error: Content is protected !!