News April 9, 2024
அருணாச்சல் விவகாரத்தில் மோடி கருத்து

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே என மோடி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக அருணாச்சல் எப்போதுமே இருந்து வருவதாக தெரிவித்த அவர், அங்கு வளர்ச்சிப் பணிகள் காலை சூரியனை போல மிக வேகமாக நடந்து வருவதாகவும் தெரிவித்தார். முன்னதாக அருணாச்சலின் 30 பகுதிகளுக்கு சீனா பெயர் சூட்டியிருந்தது.
Similar News
News July 7, 2025
NRI சிம் மூலம் இந்தியாவில் UPI பயன்படுத்த முடியுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI), வெளிநாட்டு மொபைல் நம்பரை பயன்படுத்தி UPI மூலம் இந்தியாவில் பரிவர்த்தனை செய்யும் சேவையை IDFC ஃபர்ஸ்ட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதனை NRI (அ) NRO கணக்கு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. இதற்கு IDFC ஃபர்ஸ்ட் வங்கி App-ல் லாக்-இன் செய்து ‘Pay’ என்பதை கிளிக் செய்து புதிய கணக்கை உருவாக்கி பயன்படுத்தலாம்.
News July 7, 2025
விவசாயிகள், நெசவாளர்களின் குறைகளை கேட்ட இபிஎஸ்!

2026 தேர்தலுக்காக தனது சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து தொடங்கியுள்ளார் <<16973576>>இபிஎஸ்<<>>. இந்நிலையில், தேக்கம்பட்டியில் விவசாயிகள், நெசவாளர்கள் & செங்கல் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். இதில், SP வேலுமணி உள்ளிட்ட பல அதிமுக மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக தொடங்கியுள்ள இந்த சுற்றுப்பயணம் தேர்தலில் எதிரொலிக்குமா?
News July 7, 2025
திமுக ஐடி விங்கில் இணையும் டாக்டர் அழகுராஜா!

திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளராக டாக்டர் அழகுராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதிய வியூகங்களுடன் திமுக களமிறங்குகிறது. குறிப்பாக சோசியல் மீடியாக்களில் அரசின் திட்டங்கள், அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வதந்திகளை மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என ஐடி விங்கிற்கு தலைமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.