News October 25, 2025
CM வேட்பாளர் நிதிஷ்குமார்: அறிவித்தார் மோடி

பிஹார் சட்டசபை தேர்தலில் INDIA கூட்டணி தேஜஸ்வி யாதவை CM வேட்பாளராக அறிவித்தது. தொடர்ந்து, NDA கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார் PM மோடி. நேற்று பிஹாரில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நிதிஷ்குமார் தலைமையில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார்.
Similar News
News October 25, 2025
இந்தியாவில் மட்டுமே இருக்கும் விலங்குகள்

இந்தியா பல்வேறு வகையான வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட வனவிலங்குகளுக்கு தாயகமாகும். பூமியில் வேறு எங்கும் காணப்படாத வனவிலங்குகள் இந்தியாவில் உள்ளன. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த வனவிலங்கு ஏதேனும் இருந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.
News October 25, 2025
அனைத்து கட்சி கூட்டம் நடத்துக: திருமாவளவன்

விரைவில் தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று CM ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். SIR தொடர்பாக SC-ல் விசாரணையில் உள்ள வழக்குகள் முடியும் வரை, தமிழகத்தில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் திருமா வலியுறுத்தியுள்ளார்.
News October 25, 2025
அசாம் என்கவுண்டர்: மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

இந்தியா முழுவதும் நக்சலைட்கள், மாவோயிஸ்ட்களை ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்து, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அசாமில் உள்ள கோக்ராஜார் பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற கோக்ராஜார் ரயில் தண்டவாள குண்டுவெடிப்பில், தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.


