News February 13, 2025
இந்தியாவை குறிவைக்கும் MNC நிறுவனங்கள்
MNC நிறுவனங்களுக்கு இந்தியா ஒரு துடிப்பான வணிக சந்தையாக மாறியுள்ளது. கோகோ கோலா, ஹார்லி டேவிட்சன், ஆப்பிள், கோல்கேட் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, உலகளவில் டிமாண்ட் குறைந்த நிலையிலும், இந்தியாவில் அவை அதிக வருமானத்தை ஈட்டியிருப்பது, The Economic Times அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே, வரும் ஆண்டுகளில் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Similar News
News February 13, 2025
லோக்சபா ஒத்திவைப்பு: மீண்டும் மார்ச் 10ல் கூடுகிறது
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி முடிவடைந்த நிலையில், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. முதல் பகுதியின் இறுதி நாளில் புதிய வருமான வரி மசோதா, வக்பு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டன. லோக் சபாவை தொடர்ந்து ராஜ்ய சபாவிலும் புதிய வருமான வரி மசோதாவை FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 14 வரை நடக்கிறது.
News February 13, 2025
பழம்பெரும் பாடகர் ‘பிரபாகர் கரேகர்’ காலமானார்
இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகர் பிரபாகர் கரேகர்(80) நேற்று மும்பையில் காலமானார். ஆல் இந்தியா ரேடியோவில் தன் இசைப் பயணத்தை தொடங்கிய இவர், தன் குரலினிமையால் ரசிகர்களை கவர்ந்தார். பிரபலமான பல கலைஞர்களுக்கு இவர் குருவாகவும் இருந்துள்ளார். பாடுவது மட்டுல்லாமல், இந்துஸ்தானி இசையை சர்வதேச அளவில் கொண்டு சென்றது, சர்வதேச நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள் எனப் பல வழிகளில் இவர் பங்காற்றியுள்ளார்.
News February 13, 2025
நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன்
பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.