News March 15, 2025

MLAக்கள் பிளாக்மெயில் செய்கிறார்கள்: சிவகுமார்

image

பெங்களூருவில் டிராஃபிக்கிற்கு அடுத்தபடியாக குப்பைகளை அகற்றுவது சவாலாகவுள்ளது. இது பற்றி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், MLAக்கள் தான் காரணம் என குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் Dy CM சிவகுமார். திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தை மிகப்பெரிய மாஃபியா கும்பல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதற்கேற்றபடி எம்எல்ஏக்களும் ₹800 கோடி வரை கேட்டு அரசை பிளாக்மெயில் செய்வதாக சாடியுள்ளார்.

Similar News

News March 17, 2025

காலமானார் முன்னாள் மத்திய அமைச்சர்

image

முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தந்தையுமான தேபேந்திர பிரதான் மரணம் அடைந்துள்ளார். 84 வயதான அவர் டெல்லியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். MBBS படித்த தேபேந்திர பிரதான், தனது பாதையை அரசியல் பக்கம் திருப்பினார். 1998 – 2001 காலகட்டத்தில் வாஜ்பாய் அரசில் மத்திய சாலை போக்குவரத்து, வேளாண்துறை இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார்.

News March 17, 2025

அதிமுகவில் பிளவா? இபிஎஸ் பதில்

image

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்சிடம் அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாக வெளியாகும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை என்று கூறினார். தாம் முதல்வரானது முதல் அதிமுகவை உடைக்க முயற்சி நடந்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், அதிமுகவை உடைக்க நினைப்பவர்கள்தான் உடைந்து போவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

News March 17, 2025

வந்தே பாரத் ரயில் வேகம் குறைய என்ன காரணம்?

image

நவீனமடைந்து வரும் இந்திய ரயில்வே, அதிவேக சேவையை வழங்க வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்தது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. ஆனால், அதன் வேகம் குறைக்கப்பட்டதால் பார்லிமென்டில் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில் மீது எந்த குறையும் இல்லை; தண்டவாள உள்கட்டமைப்புகள் தான் அப்டேட் செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.

error: Content is protected !!