News March 14, 2025

எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை

image

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாவுக்கு சென்னை ஐகோர்ட் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1997இல் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ₹1.5 கோடி நிவாரண நிதி பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.

Similar News

News September 1, 2025

தமிழகத்தில் புயல் சின்னம்.. மழை வெளுத்து வாங்கும்

image

வங்கக் கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிரவு கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 1, 2025

பெற்றோர்களே உஷார்! Digital Dementia தெரியுமா?

image

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்மார்ட்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளையே Digital Dementia என்று வரையறுக்கின்றனர். ஞாபக சக்தி இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் focus செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும், உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் மாறுவார்களாம். SHARE IT!

News September 1, 2025

அஜித் குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

image

கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ-க்கு மதுரை கோர்ட் பாராட்டு தெரிவித்திருந்தது. ஆனால், புதிய திருப்பமாக குற்றப்பத்திரிகையை கோர்ட் இன்று திருப்பி அனுப்பியுள்ளது. பல குறைகள் இருப்பதால் குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியுள்ளதாம். குறுகிய காலத்தில் தாக்கல் செய்ததால் குறையா (அ) தகவல்கள் மறைக்கப்படுகிறதா என பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர்.

error: Content is protected !!