News April 26, 2025
ஏவுகணை சோதனை: எச்சரிக்கும் பாகிஸ்தான்?

இந்தியா INS விக்ராந்தை அரேபியக் கடலில் கராச்சியை நோக்கி நிறுத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளது. இன்றும், நாளையும் அந்நாட்டு கடற்படை அரேபிய கடலில் ஏவுகணை சோதனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அப்போது, விமானங்கள் மற்றும் கப்பல்கள் அப்பகுதிகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
Similar News
News September 13, 2025
பாமகவில் இருந்து உருவான புதிய கட்சிகள்

அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவர் புதிய கட்சியை தொடங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால், பாமகவுக்கு தலைவர் நானே என அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ளார். ஏற்கெனவே, பாமகவில் இருந்து பிரிந்தவர்கள் புதிய கட்சிகளை தொடங்கியுள்ளனர். பிரிந்து சென்றவர்களும், அவர்கள் தொடங்கிய கட்சி குறித்தும் அறிய மேலே உள்ள போட்டோவை Swipe செய்யவும்.
News September 13, 2025
இந்தியாவை கண்டு அஞ்சும் US: மோகன் பகவத்

இந்தியாவின் எழுச்சியை கண்டு அமெரிக்கா பயப்படுவதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சி பெற்றால் தங்களுக்கு ஏதாவது நேரிடுமோ என்ற அச்சத்திலேயே அமெரிக்கா வரிகளை விதித்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என்றும் எந்தவொரு நெருக்கடிக்கும் அரசு அடி பணியக் கூடாது எனவும் பேசினார்.
News September 13, 2025
செல்வம் பெருக வைக்கும் மகாலட்சுமியின் வழிபாடு!

செல்வம் பெருக மகாலட்சுமியின் அருள் வேண்டும். அதற்கென சிறப்பு வழிபாடுகளும் உள்ளது. 2 மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி வைத்து, லட்சுமிக்கு ஏதாவது ஒரு பிரசாதமும் படைத்து வழிபடுங்கள். இவற்றுடன் சேர்ந்து காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம் செல்வம், செழிப்பு பெருகும். குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை உள்ளவர்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். SHARE IT.