News April 2, 2025
வாக்கு வங்கிக்காக தவறான கருத்து பரப்பப்படுகிறது

வாக்கு வங்கிக்காக வக்ஃபு வாரிய மசோதா குறித்து தவறான கருத்து பரப்பப்படுவதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்களவை விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், வக்ஃபு வாரிய மசோதா மூலம் இஸ்லாமிய மக்களின் மத விவகாரத்தில் அரசு தலையிட போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றசாட்டுகளை மறுத்தார். வக்ஃபு வாரிய சொத்துகளை திறம்பட நிர்வகிக்கும் நோக்குடனேயே மசோதாவில் சரத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Similar News
News January 20, 2026
இனிமேல் அமைதியை பற்றி யோசிக்க மாட்டேன்: டிரம்ப்

8 போர்களை நிறுத்த நடவடிக்கை எடுத்தும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருக்கு எழுதிய கடிதத்தில், நோபல் பரிசு கிடைக்காததால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை இல்லை. அமெரிக்க நலனை பற்றி மட்டுமே சிந்திக்க போவதாக தெரிவித்துள்ளார்.
News January 20, 2026
2047-குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: SBI

இந்தியா பொருளாதார ரீதியாக ஜெட் வேகத்தில் வளர்ந்து வருவதாக சமீபத்திய SBI அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2028-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், 2030-ம் ஆண்டுக்குள் ‘உயர் நடுத்தர வருமானம்’ கொண்ட நாடுகளின் பட்டியலில் இது சேரும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ந்த நாடாக’ இந்தியா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
ஜனவரி 20: வரலாற்றில் இன்று

*1841 – ஹாங்காங் தீவு பிரிட்டனால் கைப்பற்றப்பட்டது. *1859 – தமிழறிஞர், மொழி ஆய்வாளர் சவரிராயர் பிறந்த தினம். *1990 – அசர்பைஜான் விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் ராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. *1964 – இந்திய விமானப்படை MiG-21 போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைத்தது. *2009 – பராக் ஒபாமா, அமெரிக்காவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.


