News March 16, 2024

விருதுநகர் அருகே மதுவால் ஏற்பட்ட விபரீதம் 

image

அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவரது மனைவி பிரியா. மணிகண்டன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் வந்து சண்டை போட்டு வந்துள்ளார் இதனால் அவரது மனைவி சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (15.3.24) வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மணிகண்டன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் மணிகண்டன் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News November 7, 2025

சிவகாசி: பட்டாசு வியாபாரி தற்கொலை

image

சிவகாசி அருகே அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் செண்பகமூர்த்தி (56). பட்டாசு வியாபாரியான இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 91 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தனர். இதனால் மனவிரக்தியில் இருந்த செண்பகமூர்த்தி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

News November 7, 2025

விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

விருதுநகர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News November 7, 2025

சிவகாசியில் பட்டாசு தொழிலாளி பலி

image

ஆலங்குளம் அருகே கீழாண்மறைநாடு இந்திரா காலனியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (66). பட்டாசு தொழிலாளியான இவர் செவல்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சமத்துவபுரம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவரது பைக்கின் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!