News April 9, 2025
30 மாதத்தில் 25 குழந்தைகளை பெற்றெடுத்த ‘அதிசய’ பெண்!

30 மாதத்தில் 25 குழந்தைகளை மட்டுமின்றி, அவருக்கு 5 முறை கருத்தடை ஆப்ரேஷனும் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு மோசடி ஆக்ராவின் அரசு ஹாஸ்பிடலில் நடைபெற்றுள்ளது. ஒரே பெண்ணின் பெயரை பயன்படுத்தி, அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா மற்றும் பெண் கருத்தடை ஊக்குவிப்பு திட்டங்களில் ₹45,000 மோசடி நிகழ்ந்துள்ளது. மக்களுக்கு கொண்டுவரப்படும் திட்டங்களில் அரசு அதிகாரிகளே இப்படி மோசடி செய்தால், என்னதான் செய்வது?
Similar News
News September 19, 2025
OTT-ல் வெளியாகும் மகா அவதார் நரசிம்மா

மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம். இதனை மையமாக கொண்டு ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற படம் வெளியானது. ₹13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ₹300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்தது. அனிமேஷன் படமாக வெளியானதால், குழந்தைகள் உள்பட அனைவரும் ரசித்தனர். இந்நிலையில், இந்தப் படம் நாளை முதல் Netflix தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகிறது.
News September 19, 2025
75 வயதில் விரதமிருக்கும் PM மோடி

செப்.17-ம் தேதி 75-வது பிறந்தநாள் கொண்டாடிய PM மோடி, ஜூன் மத்தியில் தொடங்கிய சாதுர்மாஸ் விரதத்தை கடைபிடித்து வருகிறார். 4 மாதங்கள் நீடிக்கும் இந்த விரத காலத்தில் PM ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு சாப்பிடுவார். 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் PM, உணவு சாப்பிடுவதை தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடிப்பார் என்று கூறப்படுகிறது. அதே போல சைத்ர நவராத்திரி விரதத்தையும் பிரதமர் கடைபிடிக்கிறார்.
News September 19, 2025
ரோபோ சங்கருக்கு CM ஸ்டாலின் இரங்கல்

திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர் எனவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கரின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.