News October 25, 2025

அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள்: செல்லூர் ராஜு

image

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினால், அமைச்சர்கள் கேலி செய்வதாக செல்லூர் ராஜு குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக என் வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்த முடியாத அளவுக்கு ரோடு படுமோசமாக உள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், நான் ஃபார்ம் ஹவுஸுக்கு சென்றுவிட்டதாக அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கேலி செய்து, தவறுகளை சமாளிக்கப் பார்க்கிறார்கள் என சாடினார்.

Similar News

News October 26, 2025

சாதி எதிர்ப்பு படங்களையே எடுப்பேன்: மாரி செல்வராஜ்

image

சாதி எதிர்ப்பு படங்களை தொடர்ந்து எடுப்பேன் என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு வெளியாகும் 250-300 தமிழ் படங்களில் பெரும்பாலானவை கொண்டாட்டங்கள் நிறைந்தவை என்றும் தன்னையும் அதே படங்கள் எடுக்கும் கூட்டத்தில் தள்ளிவிட முயற்சிக்க வேண்டாம் எனவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மேலும், தனது வாழ்க்கையை பணயமாக வைத்து படங்கள் எடுப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

News October 26, 2025

Women’s CWC: மீண்டும் இந்தியா Vs ஆஸ்திரேலியா மோதல்

image

Women’s CWC, 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுவது உறுதியாகியுள்ளது. நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத ஆஸி., புள்ளி பட்டியலில் 13 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன. அதன்படி, வரும் 30-ம் தேதி நவி மும்பை மைதானத்தில் நடக்கும் அரையிறுதியில் ஆஸி., இந்தியா அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே, குரூப் ஸ்டேஜில் இந்தியா நிர்ணயித்த 331 ரன்கள் இலக்கை ஆஸி., சேஸ் செய்திருந்தது.

News October 26, 2025

நாளை மிக கவனம்

image

புயல் எச்சரிக்கையால் TN-ல் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. நாளை(அக்.26) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. BE CAREFUL

error: Content is protected !!