News April 24, 2025
அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யத் திட்டம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை(ED) வழக்கில் அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்<<16191630>>பரபரப்பு கருத்து <<>>கூறியதோடு, அமைச்சர் பதவியா?, சுதந்திரமான ஜாமினா? என முடிவெடுக்க 4 நாள்கள் கெடு விதித்துள்ளது. இதனால், தனது உடல்நிலை மற்றும் கட்சிக்கு ஏற்படும் கலங்கத்தை தவிர்க்கும் வகையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
Similar News
News October 23, 2025
நேருக்கு நேர் வாருங்கள்: PAK தளபதிக்கு TTP தளபதி மிரட்டல்

நேருக்கு நேர் வந்து மோதுங்கள் என PAK ராணுவ தளபதி அசிம் முனீருக்கு, PAK தலிபான் அமைப்பான TTP-யின் தளபதி காஸிம், பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவில், வீரர்களை பலியிடுவதற்கு பதில், உயர் அதிகாரிகள் போர்க்களத்திற்கு வாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார். TTP தளபதி காஸிமை பிடித்து தந்தால் ₹10 கோடி சன்மானம் என்று PAK அதிகாரிகள் அறிவித்த நிலையில், இந்த மிரட்டல் வீடியோ வெளியாகி உள்ளது.
News October 23, 2025
அனைத்து பள்ளிகளிலும்.. பறந்தது புதிய உத்தரவு

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே, கடந்த 5 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என HM – களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 23, 2025
காடுகள் வளர்ப்பில் இந்தியா டாப்-3

காடுகள், பூமியின் நுரையீரல். அவை அழியும் போது, மனித வாழ்வின் சுவாசமும் நின்று போகிறது. இந்த காடுகளை அதிகரிப்பதில், UN அறிக்கையின்படி உலகளவில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. உலக வன பரப்பு தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி, தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது. 2025-ல் இந்தியாவின் வனப்பரப்பு 72.7 மில்லியன் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் சுமார் 2% ஆகும்.