News April 25, 2025
போப் ஆண்டவர் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 4, 2025
மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.
News December 4, 2025
சற்றுமுன்: Ex ஆளுநர் காலமானார்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் (73) இன்று காலமானார். மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ், மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் ஆவார். இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்வராஜ் கவுஷல், தனது கடின உழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
News December 4, 2025
புடின் தங்கும் அரண்மனை பற்றி தெரியுமா?

2 நாள் பயணமாக இந்தியா வரும் புடின், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் தங்குகிறார். தான் வாழ்ந்த காலத்தில் உலகின் பெரும் பணக்காரராக விளங்கிய ஐதராபாத்தின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் கட்டிய அரண்மனைதான் இது. வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தில் 8.2 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் தற்போதைய மதிப்பு ₹170 கோடிக்கும் அதிகமாகும். 36 அறைகள், செயற்கை நீருற்று என பல ஆடம்பர வசதிகள் இதில் உள்ளன.


