News April 25, 2025

போப் ஆண்டவர் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

image

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், வாடிகனில் நாளை போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்குகள் நடக்கும் நிலையில், நாளைய தினம் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது எனவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News November 17, 2025

நெல்லை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை

image

நெல்லை மாவட்டத்தின் அனேக இடங்களான நெல்லை புது பஸ்டாண்ட், வள்ளியூர், தாழையூத்து, பண்குடி, ஏர்வாடி, மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (நவ.18) இப்பகுதிகள் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க.

News November 17, 2025

ராணிப்பேட்டை: AIMS நிறுவனத்தில் 1383 காலியிடங்கள்!

image

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., AIMS நிறுவனத்தில் காலியாகவுள்ள 1383 பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ஆவது தேர்ச்சி முதல் ஐடிஐ, டிகிரி, PG என அனைத்து தகுதிகளுக்கும் ஏற்ப பணிகள் உள்ளன. மாதம் ரூ.25,000 முதல் ரூ.1.51,100 வரை சம்பளம் வழங்கப்படும் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

தேனி மக்களே இது கட்டாயம்..!

image

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளில் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகள், போலீசாரின் அனுமதி இன்றி தேசிய நெடுஞ்சாலை, மாநிலச் சாலைகளில் தள்ளுவண்டி கடைகள் வைக்க அனுமதி வழங்குகின்றன. தெருவோர கடை உரிமையாளர்கள் உள்ளாட்சிகளில் அனுமதி பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து ஒப்புதல் பெறுவது கட்டாயம் என மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

error: Content is protected !!