News June 13, 2024
நேரில் சென்ற அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்

40 இந்தியர்களை பலி வாங்கிய குவைத் தீ விபத்து நடந்த பகுதிக்கு மத்திய இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சென்றுள்ளார். உடல்கள் கருகி, அடையாளம் தெரியாமல் இருப்பதால், அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதனை உடனிருந்து கவனித்து, இந்தியாவிற்கு உடல்களை மீட்டு வரும் பணியை அமைச்சர் செய்யவுள்ளார். இறந்தவர்களின் உறவினர்கள் இந்தியாவில் பரிதவிப்புடன் காத்துள்ளனர்.
Similar News
News November 12, 2025
BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்

தமிழ்நாட்டில் இன்று, நவ.17, 18 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், 17-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், 18-ம் தேதி ராமநாதபுரம், புதுகோட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று அலர்ட் கொடுத்துள்ளது.
News November 12, 2025
CINEMA ROUNDUP: மீண்டும் நடிக்க தயாரான அமலா பால்

*முனீஷ்காந்தின் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது *‘தேரே இஷ்க் மே’ படத்தின் புரமோஷனில் பிஸியாக உள்ள தனுஷ் *தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது *மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார் அமலாபால் *ரிலீஸுக்கு தயாராகிறது வெங்கட் பிரபுவின் பார்ட்டி * சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 15 மில்லியனை கடந்தது.
News November 12, 2025
அமெரிக்காவால் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’

H-1B விசா கட்டண உயர்வு, குடியேற்ற விதிகள் கடுமையாக்கம் உள்ளிட்டவற்றால் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவுக்கு படையெடுத்து வருகின்றன. Wall Street, ஜேபி மார்கன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மற்றும் தொழில்நுட்ப பணிகளை, பெங்களூரு, ஹைதராபாத், குருகிராம், மும்பை ஆகிய நகரங்களுக்கு மாற்றி வருகின்றன. இதனால், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


