News September 13, 2024
அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக பெரியசாமி உட்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில், பெரியசாமியை தவிர்த்து மற்ற அனைவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் செப்.30ம் தேதி அவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
உங்களுக்கு வரும் SMS-ல் P, S, T, G என்று உள்ளதா?

உடனே உங்க போனை எடுத்து செக் பண்ணுங்க. வந்துள்ள அனைத்து மெசேஜ்களிலும் P, S, T, G ஆகிய எழுத்துகளில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும் ★P (Promotional)- விளம்பரச் மெசேஜ் ★S (Service)- சேவை தொடர்பான மெசேஜ் ★T (Transactional)- பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ் ★G (Government)- அரசு சார்ந்த மெசேஜ். பொதுமக்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள் உண்மையானதா அல்லது மோசடியானதா என்பதை அறிய இது உதவும்.
News December 5, 2025
ரத்தன் டாடாவின் வளர்ப்பு தாயார் காலமானார்

ரத்தன் டாடாவின் வளர்ப்பு தயார் சிமோன் டாடா (95) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜெனிவாவில் பிறந்த சிமோன், 1955-ல் நாவல் டாடாவை திருமணம் செய்தார். Lakmé, Trent Ltd உள்ளிட்ட பிராண்ட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். #RIP
News December 5, 2025
சற்றுமுன்: விடுமுறை.. 3 நாள்களுக்கு ஹேப்பி நியூஸ்

வார விடுமுறையையொட்டி இன்று முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஊருக்கு செல்ல தயாராகிட்டீங்களா?


