News September 13, 2024
அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக உத்தரவு

முறைகேடு வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆஜராக சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீட்டு மனைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக பெரியசாமி உட்பட 7 பேர் மீது 2013ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில், பெரியசாமியை தவிர்த்து மற்ற அனைவர் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக வரும் செப்.30ம் தேதி அவர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 19, 2025
செப்டம்பர் 19: வரலாற்றில் இன்று

*1893 – உலகில் முதன்முறையாக நியூசிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. *1893 – சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் சொற்பொழிவை நிகழ்த்தினார். *1965 – இந்திய வம்சாவளியான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்தநாள். *1980 – தமிழிசை, நாடகக் கலைஞர் கே. பி. சுந்தராம்பாள் உயிரிழந்த நாள். *1985 – மெக்சிகோவில் நிகழ்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 9,000 பேர் உயிரிழந்தனர்.
News September 19, 2025
கோயில் மர்ம மரணம்: தோண்ட தோண்ட எலும்புகள்

கர்நாடகா <<17492852>>தர்மஸ்தலா கோயில்<<>> மர்ம மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த கோயில் நிர்வாகி, பொய் புகார் அளித்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால், கோயிலுக்கு அருகில் உள்ள பங்களாகுட்டா வனப்பகுதியில், கடந்த 2 நாள்களாக தோண்ட தோண்ட மண்டை ஓடுகளும், எலும்புகளும் கிடைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 நாள்களில் மட்டும் 7 மண்டை ஓடுகள், ஏராளமான எலும்புகள், சேலைகள் சிக்கியுள்ளன.
News September 19, 2025
இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கியது

குரேஷியாவில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை அண்டிம் பங்கல் வெண்கலம் வென்றுள்ளார். ஸ்வீடன் வீராங்கனை ஜோனா டெனிஸை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளார். போட்டி தொடங்கியது முதல் சக வீரர் தகுதி நீக்கம், பதக்கம் வெல்லாதது என இந்திய வீரர்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்ட நிலையில், இந்தியா வெறும் கையுடன் திரும்பாது என்பதை அண்டிம் உறுதி செய்துள்ளார்.