News March 1, 2025
இந்தியை தேசிய மொழி என்ற அமைச்சர்

இந்தி மொழியை தேசிய மொழி என்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்பு தொடர்பான பிரச்னைகள் வெடித்துக் கொண்டிருக்கும் வேளையில், ”தேசிய மொழியான இந்தி, முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்” என்று அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்த உங்களது கருத்து என்ன?
Similar News
News March 1, 2025
வந்தே பாரத் ரயிலிலும் தமிழ் புறக்கணிப்பு

தமிழ்நாட்டிற்குள் ஓடும் வந்தே பாரத் ரயிலிலும், தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை-நெல்லை இடையே செல்லும் வந்தே பாரத் ரயிலில் ஒரு இடத்தில் கூட தமிழ் இல்லை. முழுவதும் இந்தி, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. I R என்பதையும் (Indian Railway) இந்தியில் பா ஆர் (பாரத் ரயில்வே) என எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் இந்த ரயில் சென்னை ICFல் தயாரிக்கப்பட்டது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
News March 1, 2025
பாஜக தேசியத் தலைவராகிறாரா வானதி?

பாஜகவுக்கு புதிய தேசியத் தலைவர் இம்மாதம் 15 அல்லது 16ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய தலைவர் பதவிக்கு பாஜக மூத்த பெண் தலைவர்கள் யாரேனும் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக, ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் அப்பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
News March 1, 2025
விஜய் கட்சி ஜெயிக்காது: அண்ணாமலை

2026இல் விஜய்யின் தவெக அபார வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலை, பிரசாந்த் கிஷோர் வெற்றிபெறும் என சொன்ன கட்சி (தவெக) ஜெயிக்காது. அந்த கட்சிக்கு 3ஆம் இடமே கிடைக்கும் என அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ஆணவத்துடன் குறுநில மன்னர்கள் போல திமுகவினர் செயல்படுவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். எனவே, அடுத்து பாஜக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றார்.