News August 24, 2024
எழுத்திலும் அமைச்சர் எ.வ.வேலு சாதித்துள்ளார்: உதயநிதி

அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், ரஜினிகாந்த் அதனை பெற்றுக் கொண்டார். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி, எதிலும் வல்லவர் மட்டும் அல்ல, எழுத்திலும் வல்லவர் என்பதை எ.வ.வேலு நிரூபித்துள்ளதாக பாராட்டினார். கருணாநிதியை, ஒரு தாயுடன் ஒப்பிட்டு வெளியான முதல் நூல் இதுதான் எனவும், இது படிப்பவர்களின் வாழ்வில் நிச்சயம் தாக்கம் ஏற்படும் என்றார்.
Similar News
News March 3, 2026
ஈரானுக்கு ஆதரவு கையை நீட்டிய சீனா

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு உள்ள நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் குறித்து சீனா வாய் திறக்காதது சர்வதேச கவனம் பெற்றது. இந்நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. போர் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
News March 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 3, 2026
பாஜக மிரட்டலால் கூட்டணியில் இணைந்த கட்சிகள்: உதயநிதி

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய <<19273321>>மோடி <<>>தன்னை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம் என உதயநிதியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பயப்பட வேண்டாம் என தங்களிடம் சொல்வதை விட, உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களிடம் சொல்வதே சரியாக இருக்கும் என உதயநிதி பதில் அளித்துள்ளார். பாஜகதான் பல கட்சிகளை மிரட்டி அவர்களுடன் இணைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


