News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News December 13, 2025
G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய EX நீதிபதிகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக, EX நீதிபதிகள் 56 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், INDIA கூட்டணி பதவிநீக்க நோட்டீஸ் கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சித்தாந்த, அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் முயற்சி. பதவிநீக்க நோட்டீஸை அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்த கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
News December 13, 2025
ரேஷன் கார்டு பெயர் மாற்றம்.. இன்று சிறப்பு முகாம்!

ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை ஒரே நாளில் வழங்கும் வகையில் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னையில் மண்டல அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களிலும் காலை 10 – பிற்பகல் 1 மணி வரை முகாம்கள் நடைபெறும். ரேசன் கடைகளில் பொருள் வாங்க நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள், இன்றைய சிறப்பு முகாம்களில் அங்கீகாரச் சான்று பெற்று கொள்ளலாம்.
News December 13, 2025
கோலியை முந்தினாலும் அலட்டிக் கொள்ளாத வைபவ்!

U19 ஆசியக்கோப்பையில் நேற்றைய UAE உடனான போட்டியில், இந்திய வீரர் சூர்யவன்ஷி 171 ரன்கள் விளாசி ருத்ரதாண்டவம் ஆடினார். இதையடுத்து, கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் பட்டியலில் அவரது பெயர் தடாலடியாக உயர்ந்து, கோலியையும் முந்தியது. இது தொடர்பாக பேசிய சூர்யவன்ஷி, இது போன்ற செய்திகள் சிரிப்பை வரவழைக்கிறது; இருப்பினும் இது எனது கிரிக்கெட்டை பாதிக்காது, கடந்து சென்றுவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.


