News September 28, 2024

மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

image

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.

Similar News

News January 14, 2026

கவனம்.. இருமல் மருந்துக்கு தடை

image

ம.பி.,யில் Coldrif இருமல் மருந்தை குடித்த 22 குழந்தைகள் உயிரிழந்தது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ‘அல்மாண்ட் கிட் சிரப்’ மருந்துக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. இதில் சிறுநீரகத்தை பாதிக்கும் ‘எத்திலீன் கிளைகோல்’ அதிகமாக இருப்பது தெரிய வந்ததால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பிஹாரில் உள்ள ட்ரிடஸ் ரெமிடீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. BE ALERT.

News January 14, 2026

சற்றுமுன்: ₹5,000 ஆக உயர்த்தி அறிவித்தது தமிழக அரசு

image

பொங்கல் பரிசாக பல்வேறு அறிவிப்புகளை <<18854282>>தமிழக அரசு<<>> அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், மாநில சுகாதாரத் துறையில் பணியாற்றும் பகுதிநேர மகப்பேறு பணியாளர்களுக்கு (RCH) வழங்கப்பட்டு வரும் ₹1,500 மாத சம்பளம் ₹5,000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை ஜன.19-ல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

பெயர்களை நீக்கவும் அதிகாரம் உள்ளது: ECI

image

SIR-ஐ எதிர்த்து SC-ல் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஒருநபரின் குடியுரிமையை தீர்மானிக்கும் வரை, அவரது வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியுமா என்று SC, கேள்வி எழுப்பியது. இதற்கு ECI, சந்தேகத்திற்குரிய சந்தர்ப்பத்தில் குடியுரிமை குறித்து விசாரிக்கவும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கவும் தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று பதிலளித்துள்ளது.

error: Content is protected !!