News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News January 15, 2026
மக்கள் நாயகன் காலமானார்.. பொங்கல் நாளில் அஞ்சலி

ராணுவ வீரர் பிரமோத் ஜாதவ், தனது மனைவியை பிரசவத்திற்கு அழைத்து சென்றபோது நிகழ்ந்த விபத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். பிரமோத்துடன் பணிபுரிந்த ராணுவ வீரர்கள் சங்கராந்தி நாளில், அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். மேலும், பிரமோத்தின் போட்டோவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரமோத் உடலுக்கு அவரது மனைவி <<18829931>>ஸ்டெச்சரில் சென்று இறுதி அஞ்சலி<<>> செலுத்தியிருந்தார்.
News January 15, 2026
தமிழ் Biggboss-ன் அடுத்த Host இவரா?

டைரக்ஷனுக்கு கொஞ்சம் பிரேக் விட்டுவிட்டு தற்போது நடிப்பு, TV ஷோக்களின் நடுவர் என படு பிஸியாகிவிட்டார் மிஷ்கின். இந்நிலையில், பலரும் விரும்பி பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த ஷோவின் அடுத்த தொகுப்பாளர் ஆகும் வாய்ப்பு மிஷ்கினுக்கு கிடைக்கலாம் என பேசப்படுகிறது. பிக்பாஸை மிஷ்கின் Host செய்தால் எப்படி இருக்கும்?
News January 15, 2026
மே.வங்கத்தில் வன்முறை கும்பல் ஆட்சி: ED

மே.வங்கத்தில் <<18797106>>I-PAC<<>> அலுவலக சோதனையை CM மம்தா பானர்ஜி தடுத்ததாக SC-ல் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில், ரெய்டின் போது மம்தாவும், போலீசாரும் அத்துமீறி நுழைந்து ஆதாரங்களை திருடி சென்றதாக ED குற்றஞ்சாட்டியதுடன், மே.வங்கத்தில் நடப்பது வன்முறை கும்பலின் ஆட்சி என்றும் விமர்சித்தது. இதற்கு பதிலளித்த மம்தா தரப்பு, தேர்தல் நேரத்தில் கட்சியின் ரகசிய தரவுகளை திருடவே ED திட்டமிட்டதாக வாதிட்டது.


