News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News December 31, 2025
₹1,000 கட்டி உடனே செய்யுங்க… நள்ளிரவு முதல் செல்லாது

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை, இதுவரை இணைக்கவில்லை என்றால் இன்று நள்ளிரவு 12 மணிக்குள் இணைத்து விடுங்கள். இல்லையென்றால், நாளை முதல் PAN எண் செல்லாது என அறிவிக்கப்படும். ஏற்கனவே காலக்கெடு முடிந்துவிட்டதால், இப்போது PAN – ஆதாரை இணைக்க விரும்புபவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். அதேநேரம், 2024 அக்.1-க்கு பின் PAN அட்டை வாங்கியவர்கள் அபராதம் இன்றி இணைத்துக் கொள்ளலாம்.
News December 31, 2025
வன்முறையை தூண்டியதாக சீமான் மீது போலீஸில் புகார்

TN-ல் சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சீமான் பேசியதாக திராவிட தமிழர் கட்சியின் சார்பில் மதுரை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 11-ம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிராமண கடப்பாரையால் பாழடைந்த திராவிட கோட்டையை இடிப்பேன் என சீமான் பேசியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு சமூகத்தினரிடையே வன்முறையை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
பொங்கல் விடுமுறையில் மாற்றம் வரப்போகிறதா?

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல, இதுவரை அரசு பஸ்களில் 77,392 பேர் புக்கிங் செய்துள்ளனர். அடுத்த வாரம் ஸ்பெஷல் பஸ்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனால், புக்கிங் எண்ணிக்கை மேலும் உயரும். எனவே, சிரமமின்றி மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, பொங்கலுக்கு முதல் நாளான ஜன.14-ல் விடுமுறை விட பலரும் வலியுறுத்தியுள்ளனர். அரசும் விரைவில் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


