News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News January 15, 2026
செங்கை: பொங்கல் நேரத்தில் கரண்ட் கட்டா? உடனே CALL!

பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தடையற்ற மின்சாரம் வழங்க செங்கல்பட்டு மின்சார வாரியம் உறுதி பூண்டுள்ளது. ஒருவேளை மின் தடை ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். 94987 94987 என்ற எண்ணிற்கு அழைத்து உங்கள் மின் இணைப்பு எண்ணைக் கூறினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் பிரச்னையை சரிசெய்வார். பொங்கல் ஒளிமயமாக அமைய மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News January 15, 2026
உயிருடன் இருப்பதை உறுதி செய்ய APP அறிமுகம்

சீனாவில் தனிமையில் தவிப்பவர்கள் Hikikomori என்ற வருத்தத்திற்குரிய Trend-ஐ பின்பற்றுகின்றனர். இவர்கள் ஒரு அறைக்குள் தங்களை மாதக்கணக்காக பூட்டிக்கொள்கின்றனர். பிறகு உணவு தீர்ந்து பசியில் வாடி இறக்கின்றனர். பேசவும் யாருமில்லாததால் இறந்தால் கூட தாமதமாகவே தெரியவருகிறது. எனவே, இதற்காக ஒரு APP-ஐ அறிமுகப்படுத்தும் நிலைக்கு சீனா வந்துள்ளது. நம்மூரில் இந்நிலை வராமலிருக்க நண்பர்களிடம் அடிக்கடி பேசுங்க.
News January 15, 2026
இந்தியா இதை நிரூபித்து காட்டியுள்ளது: PM மோடி

நமது நாடு, பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக மாற்றியுள்ளதாக PM மோடி கூறியுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் பேசிய அவர், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியுமா என்ற சந்தேகம் சர்வதேச அளவில் எழுந்ததாக குறிப்பிட்டார். ஆனால், அந்த அச்சங்களை இந்தியா இன்று தவறு என்று நிரூபித்து காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


