News September 28, 2024

மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

image

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.

Similar News

News December 7, 2025

மக்கள் நாயகன் காலமானார்.. நேரில் அஞ்சலி

image

நாட்டிற்காக வீர மரணமடைந்த ராணுவ வீரர் சக்திவேலின் மறைவுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். J&K எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த சக்திவேலின் உடல் சொந்த ஊரான திருத்தணிக்கு கொண்டு வரப்பட்டு <<18491316>>ராணுவ மரியாதையுடன் அடக்கம்<<>> செய்யப்பட்டது. அரக்கோணம் MP ஜெகத்ரட்சகன் சக்திவேலின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். சக்திவேலின் நண்பர்கள் அவரது குடும்பத்தினருக்கு இன்று நேரில் ஆறுதல் கூறினர்.

News December 7, 2025

School Fees-க்கு ₹1 லட்சம் தருகிறது அரசு!

image

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை வழங்குகிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற <>scholarships.gov.in<<>> – ல் அப்ளை பண்ணுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 7, 2025

WORLD CHAMPION – காசிமேடு கீர்த்தனா!

image

காசிமேடு கீர்த்தனா- கேரம் விளையாட்டில் தவிர்க்க முடியாத பெயர். மாலத்தீவில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் கீர்த்தனா(21) ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று, உலக சாம்பியன் ஆகியுள்ளார். தந்தையை சிறுவயதிலேயே இழந்த நிலையில், கீர்த்தனாவின் 2 தம்பிகளின் வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருகிறது. வறுமை வாட்டினாலும், விடாமுயற்சியால் வென்ற கீர்த்தனாவிற்கு பாராட்டுகள்!

error: Content is protected !!