News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News December 31, 2025
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்: TTV

TN-ஐ போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளதாக அமைச்சர் <<18711448>>மா.சு.,<<>> தெரிவித்திருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள TTV தினகரன், அமைச்சரின் கூற்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்று விமர்சித்துள்ளார். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தவறியதன் விளைவே <<18693605>>திருத்தணி<<>> சம்பவம் என்று கூறிய அவர், இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பொருள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியுள்ளார்.
News December 31, 2025
திடீர்’னு பெட்ரோல் காலியா? Fuel@Call ஆப் யூஸ் பண்ணுங்க!

ஆள் அரவமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். கடுப்பேற்றும் இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News December 31, 2025
அமெரிக்காவை தொடர்ந்து சீனாவும்…

இந்தியா-பாக்., மோதலின் போது, 3-ம் தரப்பு மத்தியஸ்தம் நடைபெறவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆனால், தானே முன்னின்று தீர்த்து வைத்ததாக டிரம்ப் சொல்லி வருகிறார். தற்போது அவரைத்தொடர்ந்து சீனாவும் உரிமை கொண்டாடியுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இரு நாடுகளுக்கும் இடையே பெய்ஜிங் மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளது விவாதத்தை எழுப்பியுள்ளது.


