News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News January 14, 2026
நெல்லை: சோதனையில் சிக்கிய கள்ளத் துப்பாக்கி

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் பொங்கல் பாதுகாப்பை முன்னிட்டு விடிய விடிய சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அமீர், பாலா ஆகிய இருவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர்களிடமும் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
News January 14, 2026
பொங்கல் பரிசு விபரீதம்.. தற்கொலை

பொங்கல் பரிசு ₹3,000 வாங்கிய தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன், மொத்த பணத்தையும் மது அருந்த செலவு செய்துள்ளார். பரிசு பொருள்களை மட்டும் வீட்டில் கொடுத்தபோது, செலவிற்காக மனைவி ₹1,000 கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் மனைவியை கரும்பால் அடித்ததால், மனமுடைந்த போன பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஏற்கெனவே <<18843663>>கோவையில் <<>> பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 14, 2026
BREAKING: ₹2,500 உயர்த்தியது தமிழக அரசு

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 20 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஸ், இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் மேலும் ₹2,500 உயர்த்தப்படுவதாக ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ₹12,500-ல் இருந்து ₹15,000 ஆக உயர்த்தப்படுகிறது.


