News September 28, 2024
மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.
Similar News
News December 27, 2025
புதிய 500 ரூபாய் நோட்டு.. வந்தது வார்னிங்

ATM மெஷினுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போலி 500 ரூபாய் நோட்டுகளை தயாரித்த மளிகை கடைக்காரர் ராஜேந்திரன் போலீசில் சிக்கியுள்ளார். திருப்பூர், ஆண்டிபாளையத்தில் தனியார் வங்கி ATM-ல் 12 நோட்டுகளை(₹500) ஒருவர் டெபாசிட் செய்துள்ளார். இதை கண்டுபிடித்த மேலாளர் போலீசிடம் புகார் அளிக்க விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ATM மெஷினையே ஏமாற்றும் வகையில் போலி ₹500 நோட்டுகள் இருப்பதால் மக்கள் உஷாராக இருங்க.
News December 27, 2025
குளிர்காலத்துக்கான ஒரு சூப்பர் ஃபுட் இது!

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல், சோர்வு ஆகியவற்றை தடுக்க பூசணி விதைகள் ஒரு சூப்பர் ஃபுட் என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால், *இதில் உள்ள ஜிங்க், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *உடலுக்கு ஆற்றலை தருகிறது *மெக்னீசியம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது *சரும வறட்சியை தடுக்கிறது *நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குகிறது.
News December 27, 2025
பிரபல நடிகை மரணம்.. பரபரப்பு தகவல்

‘தி லயன் கிங்’ புகழ் <<18667657>>நடிகை இமானி ஸ்மித்<<>>(25) கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 நாள்களுக்கு முன்பு ஆண் நண்பரால் தனது குழந்தைகள் கண்முன்னே இமானி படுகொலை செய்யப்பட்டார். தான் கொடுத்த பணத்தை இமானி திருப்பி கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் கொன்றதாக கைது செய்யப்பட்ட ஜோர்டன் போலீசாரிடம் கூறியுள்ளார். ஏற்கெனவே கணவரை பிரிந்து வாழும் இமானியின் 2 குழந்தைகள் தற்போது பரிதவித்து வருகின்றனர்.


