News September 28, 2024

மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

image

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.

Similar News

News December 26, 2025

புதின் அழிந்து போகட்டும்: ஜெலன்ஸ்கி

image

கிறிஸ்துமஸ் நாளான இன்று நம் அனைவருக்கும் ஒரே கனவும் வேண்டுதலும் தான் இருக்கிறது, அது புதின் அழிந்து போகட்டும் என்பதுதான் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸை ஒட்டி அவர் வெளியிட்ட வீடியோவில், புதின் அழிய வேண்டும் என்பதை விட பெரிய வேண்டுதலை கடவுளிடம் கேட்கிறோம், அது உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் என்றும் கூறியுள்ளார்.

News December 26, 2025

மதவெறியர்களின் அட்டூழியங்கள்: சீமான்

image

வடமாநிலங்களின் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாக்களில் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெருமக்கள் மீது தொடரும் மதவெறி தாக்குதல் எல்லாம் திட்டமிடப்பட்ட இன ஒதுக்கல் கோட்பாட்டின் செயல் வடிவமே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 26, 2025

இது காட்டுமிராண்டித்தனம்: ஜான்வி கபூர்

image

எந்தவொரு நிலையிலும் தீவிரவாதம் மனிதநேயத்தை மறப்பதற்கு முன்பு அதை கண்டித்து எதிர்க்க வேண்டும் என்று ஜான்வி கபூர் உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்து இளைஞர் சிபு சந்திர தாஸ் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் நடப்பது காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் காட்டமாக கண்டித்துள்ளார்.

error: Content is protected !!