News September 28, 2024

மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க்

image

தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பார்க் அமைய உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர், தி.மலையில் இதற்கான முதற்கட்ட பணிகளை அரசு தொடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பை விரிவுபடுத்த இரண்டாம், மூன்றாம் தர நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா செயல்பாட்டில் உள்ளன.

Similar News

News December 8, 2025

தொழில் தொடங்க ₹10 லட்சம் தரும் அரசு திட்டம்!

image

TN பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க பெண்களுக்கு 25% மானியத்துடன் ₹10 லட்சம் கடன் கிடைக்கும். அத்துடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை பெற, தொழிலுக்கான மொத்த செலவில் 5% விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்க வேண்டும். 18 – 55 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்துக்கு அப்ளை பண்ண <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE.

News December 8, 2025

BREAKING: மு.க.அழகிரிக்கு அதிர்ச்சி

image

கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் விடுவிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி SC-யில் மேல்முறையீடு செய்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 8, 2025

விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும்: அன்புமணி

image

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக படுதோல்வி அடையும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். விரைவில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று கூறிய அவர், பாமக இருக்கும் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றார். கட்சி பிரச்னை குறித்த கேள்விக்கு, ‘உள்கட்சி பிரச்னைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம். கட்சிக்காரர்களிடம் அது பற்றி பேசுவேன். மீடியாவிடம் அல்ல’ என்று பதிலளித்தார்.

error: Content is protected !!