News December 14, 2024
ஜனவரியில் அரையாண்டு தேர்வு?

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரியில் நடத்தப்படலாம் எனவும், இதற்காக அரையாண்டு விடுமுறையில் மாற்றமிருக்காது எனவும் கூறப்படுகிறது.
Similar News
News March 7, 2026
யாரை பற்றி பதிவிட்டிருக்கிறார் கிருத்திகா உதயநிதி?

ஒரு செலிபிரிட்டி எப்போது பிரச்னையில் சிக்குகிறார் என்பதை பற்றி கிருத்திகா உதயநிதி பதிவிட்டுள்ளார். மக்கள் தன்னை எப்படி பார்க்கிறார்களோ அதுதான் நான் என நினைக்க தொடங்கி, எப்போது ஒரு செலிபிரிட்டி தன்னுடைய சுயத்தை கைவிடுகிறாரோ அப்போது அவர் பிரச்னையில் சிக்குகிறார் என்று அர்த்தம் என பதிவிட்டுள்ளார். இதனால் யாரை பற்றி கிருத்திகா சொல்லவருகிறார் என X தளத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
News March 7, 2026
ஒரு பக்கம் போர், மறுபக்கம் பூகம்பம்… துயரத்தில் ஈரான்

இஸ்ரேல் தாக்குதலால் கடும் பாதிப்பில் இருக்கும் ஈரானில், இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் மேலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ஈரானில் பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள நிலநடுக்கம், 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக USGS அமைப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த செவ்வாயன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த நிலநடுக்கம் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 7, 2026
₹6,600, ₹7,500.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன்கடை ஊழியர்களுக்கு 15% அடிப்படை ஊதியம், 55% அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் விற்பனையாளர்களுக்கு ₹7,500, கட்டுனர்களுக்கு <<19309935>>₹6,600 தொகுப்பூதியம்<<>> ஒரு வருடம் வழங்கப்படும். ஓராண்டுக்குப்பின், விற்பனையாளர்களுக்கு ₹39,600, கட்டுனர்களுக்கு ₹35,000 வரை காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும், 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.


