News June 26, 2024
திருமாவளவன் பேசும்போது மைக் கட்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் இன்று புதிய சபாநாயகரை வாழ்த்தி பேசினார். நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடம் மாற்றப்பட்டது குறித்து பேசினார். அப்போது அவர் பேசிய மைக் அணைக்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் கூச்சல் எழுப்பினர். ஆனாலும், விடாமல் தான் பேச வந்ததை பேசி முடித்துவிட்டு அமர்ந்தார் திருமாவளவன்.
Similar News
News October 23, 2025
இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டி

மகளிர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, தெ.ஆப்பிரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு இப்போது இந்திய அணி போராடி வருகிறது. அதற்கு இன்று நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். தொடரை சிறப்பாக தொடங்கிய இந்திய கடைசி 3 போட்டிகளில் சொதப்பியது. மீண்டும் வெற்றிப்பாதைக்கு இந்தியா திரும்புமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
News October 23, 2025
வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைய இப்படி விளக்கேற்றுங்கள்!

சூரியன் மறைவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் விளக்கு ஏற்றுவது நல்லது. லட்சுமி தேவிக்காக விளக்கை வடக்கு திசையில் ஏற்றி வைக்க வேண்டும். அங்கே செருப்பு இருக்கக் கூடாது. விளக்கை நன்றாக சுத்தம் செய்து விட்டே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கில் கரி படிந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். விளக்கு ஏற்றியவுடன் கதவை மூடக்கூடாது. வீட்டிற்குள் வரும் நல்ல சக்திகள் வெளியே தங்கிவிடும் என்பது ஐதீகம். SHARE IT.
News October 23, 2025
பள்ளிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் புதிய அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.23) காலையில் மழை தொடரும் என IMD தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.