News June 26, 2024
திருமாவளவன் பேசும்போது மைக் கட்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் இன்று புதிய சபாநாயகரை வாழ்த்தி பேசினார். நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், காந்தி, அம்பேத்கர் சிலைகள் இடம் மாற்றப்பட்டது குறித்து பேசினார். அப்போது அவர் பேசிய மைக் அணைக்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் கூச்சல் எழுப்பினர். ஆனாலும், விடாமல் தான் பேச வந்ததை பேசி முடித்துவிட்டு அமர்ந்தார் திருமாவளவன்.
Similar News
News January 25, 2026
மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள்: எலோன் மஸ்க்

டெஸ்லாவின் ‘ஆப்டிமஸ்’ ரோபோக்கள் 2027-ம் ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். டாவோஸில் பேசிய அவர், தற்போது தொழிற்சாலைகளில் எளிய பணிகளைச் செய்து வரும் இந்த ரோபோக்கள், விரைவில் மனிதர்களை மிஞ்சி வகையில் சிக்கலான வேலைகளையும் செய்யும் என்றும், விற்பனைக்கு வரும்போது, அவை மிக உயர்ந்த பாதுகாப்புடன் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 25, 2026
இன்று அறிவிக்கப்பட இருக்கும் பத்ம விருதுகள்!

கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
News January 25, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 591 ▶குறள்: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. மறை. ▶பொருள்: ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.


