News September 29, 2025
வைரலாகும் எம்ஜிஆர் போட்டோ

1980-ல் சென்னையில் எம்ஜிஆர் பேச்சை கேட்க திரண்ட மக்கள் கூட்டத்தை காட்டும் படம், தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இம்மாதிரி கூட்டங்களுக்கு சென்றுவந்த தங்கள் அப்பாக்களும் தாத்தாக்களும் ‘பையை தொலைத்துவிட்டோம்’, ‘செருப்பை விட்டுவிட்டோம்’ என்று கூறியதாக நினைவலைகளை ஷேர் செய்கின்றனர். இவ்வளவு பெரிய கூட்டத்தை அந்த காலத்தில் எப்படி கட்டுப்படுத்தி இருப்பார்கள்?
Similar News
News September 29, 2025
ஆசிய கோப்பையில் இந்தியாவின் ஆதிக்கம்: முர்மு

9-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று இந்தியா அணி அபார சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியை ஜனாதிபதி திரெளபதி முர்மு பாராட்டியுள்ளார். இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இருந்து, இந்தியா தனது ஆதிக்கத்தை விளையாட்டில் செலுத்தியுள்ளதாக முர்மு குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் விளையாட்டுகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News September 29, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News September 29, 2025
குறைகளை களையவே ஆணையம்: அருணா ஜெகதீசன்

தமிழகத்தையே உலுக்கிய கரூர் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில், இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அவர் கரூருக்கு சென்று விசாரணையை துவக்கினார். இதுகுறித்து அவர் பேசுகையில், குறைபாடுகளை களைவதற்காகவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவம் இனி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பரிந்துரைப்போம் என்றார்.