News January 12, 2025
CM-க்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உருக்கமான கடிதம்

பெண்களை பின்தாெடர்ந்தால் 5 ஆண்டு ஜெயில் என அண்மையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலினுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆண்களுக்கு எதிராக பெண்கள் பொய் புகார் அளிக்க வாய்ப்புள்ளது. அதுபோல புகார் அளிக்கும் பெண்ணுக்கு 5 ஆண்டு ஜெயில் அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளது.
Similar News
News September 15, 2025
புதிய போட்டோ.. மீண்டும் விஜய் – திரிஷா சர்ச்சை

இன்ஸ்டாகிராமில் திரிஷா பதிவிட்டுள்ள புகைப்படத்தால், விஜய் உடனான கிசுகிசுவில் மீண்டும் அவர் சிக்கியுள்ளார். விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். ஆனால், விஜய்யின் பரப்புரை வாகனத்தில் அவர் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தேர்தல் வரை கொஞ்சம் சும்மா இருங்க என்றும் தவெகவினர் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இப்படியெல்லாம் கமெண்ட் செய்வது தேவை தானா?
News September 15, 2025
தேசத்தை ஆராதிக்கும் சர்வதேச அழகி!

2023-ல் Miss International India Crown வென்ற புனேவை சேர்ந்த காஷிஷ் மெத்வானிக்கு சினிமாவிலும், மாடலிங் துறையில் எக்கச்சக்க ஆஃபர்கள். ஆனால், எந்த Offer-க்கும் அசராத அவர், தன்னை தேச சேவைக்கு அர்ப்பணித்துள்ளார். தான் அழகு மட்டுமில்லை, வீரமகள் என்பதையும் உணர்த்தியுள்ளார் காஷிஷ். 2024-ல் ராணுவ அதிகாரிகளுக்கான CDS தேர்வில் 2-ம் இடம் பிடித்து, தற்போது விமானப்படையில் பணிபுரிகிறார். சல்யூட் மேடம்!
News September 15, 2025
சிறந்த வீரருக்கான விருதை வென்றார் சிராஜ்

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் முகமது சிராஜ் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், முகமது சிராஜின் ஆக்ரோஷமான பந்துவீச்சில் இந்தியா தொடரை டிரா செய்ய முடிந்தது. சிறந்த வீரராக அவர் தேர்வாக இதுவே முக்கிய காரணம். அதேபோல் மகளிரில் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் விருதை பெற்றுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டராக ஓர்லா அசத்தியிருந்தார்.