News August 16, 2025
₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்கும் மெலனியா டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக, தற்போதைய அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு எதிராக ஹண்டர் பைடன் அவதூறு பரப்பியதாக கூறி ₹8,700 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் டிரம்ப்பிற்கு மெலனியாவை அறிமுகப்படுத்தியதாக ஹண்டர் பேசியிருந்தார்.
Similar News
News August 16, 2025
கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரம் எது?

இன்று கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் விரதமிருந்து நாள் முழுவதும் கிருஷ்ணரை வழிபடுவார்கள். பஞ்சாங்க கணிப்பின் படி, ஆகஸ்ட் 16 அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. சனிக்கிழமை என்பதால் காலை 10:30 முதல் 11:50 வரை கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் பூஜைகளை செய்து வழிபடவும் உகந்த நேரமாகும்.
News August 16, 2025
EPS-க்கு எதிராக அணிதிரளும் அதிமுக சீனியர்கள்

அன்வர் ராஜா, மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு என பல மூத்த தலைவர்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இபிஎஸ் உரிய மரியாதை அளிக்காததே அவர்களது புகாராக உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
32 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 32 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போவதாக IMD எச்சரித்துள்ளது. காஞ்சி, கடலூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், சேலம், அரியலூர், திருச்சி, தஞ்சை, நாகை, கோவை, தென்காசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.