News April 28, 2025

மெஹுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்கள் தீக்கிரை?

image

டெல்லி: ED தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதில், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் வழக்கின் விசாரணை பதிவுகள் அழிந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், வழக்கின் உண்மையான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் நகல் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில்தான் சோக்சி பெல்ஜியத்தில் கைது கைதானார்.

Similar News

News November 21, 2025

3 மாதங்களுக்கு ஸ்ரேயஸ் பேட்டை தொடக்கூடாதாம்

image

மண்ணீரல் காயம் காரணமாக இந்திய ODI துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அடுத்த 2 – 3 மாதங்களுக்கு விளையாட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், இம்மாத இறுதியில் நடைபெறும் SA-வுக்கு எதிரான ODI தொடர் மற்றும் டிசம்பரில் நடக்கும் NZ-க்கு எதிரான ODI தொடரில் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

News November 21, 2025

நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

image

2021-ஐ போலவே 2026 பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.

News November 21, 2025

மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும்: ராமதாஸ்

image

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திட்டம் தொடர்பான அறிக்கையை 2024-ல் அனுப்பிய தமிழ்நாடு அரசு, அதற்கான பூர்வாங்க பணிகளையும் தொடங்கியுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

error: Content is protected !!