News April 28, 2025

மெஹுல் சோக்சி, நீரவ் மோடி ஆவணங்கள் தீக்கிரை?

image

டெல்லி: ED தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய வழக்கு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதில், மெஹுல் சோக்சி, நீரவ் மோடி உள்ளிட்டோர் வழக்கின் விசாரணை பதிவுகள் அழிந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், வழக்கின் உண்மையான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் நகல் மட்டுமே அங்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அண்மையில்தான் சோக்சி பெல்ஜியத்தில் கைது கைதானார்.

Similar News

News December 1, 2025

₹8,119 கோடிக்கு கோயில் நிலங்கள் மீட்பு: சேகர்பாபு

image

திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை 3,865 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும், ₹8,119 கோடி மதிப்பிலான 8,000 ஏக்கர் பரப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ₹1,557 கோடிக்கு உபயதாரர்கள் நிதி உதவி வழங்கி உள்ளதாகவும், அதன் மூலம் 12,000 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

News December 1, 2025

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

image

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி, ஒரு கிராம் ₹12 ஆயிரத்தை தாண்டியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹90 உயர்ந்து ₹12,070-க்கும், சவரனுக்கு ₹720 உயர்ந்து ₹96,580-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

News December 1, 2025

அமித்ஷா வருகைக்காக காத்திருக்கிறாரா ஓபிஎஸ்?

image

டிச.15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள் என EPS-ஐ எச்சரித்திருந்த ஓபிஎஸ், NDA கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இந்த வார இறுதியில் சென்னை வரவிருக்கும் அமித்ஷா, தங்கள் தரப்பை அழைத்து பேசுவார் என OPS எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். ஒருவேளை பேசவில்லை என்றால், விஜய் பக்கம் செல்வது குறித்து டிச.15-ல் அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

error: Content is protected !!