News April 11, 2025
அமித்ஷாவுடன் சந்திப்பு: இபிஎஸ் திடீர் ஆலோசனை

சென்னை தனியார் ஹோட்டலில் இன்னும் சற்று நேரத்தில் அமித்ஷாவை சந்திக்க உள்ள நிலையில், ADMK மூத்த நிர்வாகிகளுடன் EPS திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். BJP-யுடனான கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News November 16, 2025
இதெல்லாம் ரூல்ஸ் கிடையாது… ஆனால், ஃபாலோ பண்ணணும்

சீனாவில் சில விஷயங்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர். காலங்காலமாக பின்பற்றப்படும் அந்த விதிமுறைகளில் சிலவற்றை, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் எந்த விதிகள் உங்களை ஆச்சரியப்பட வைத்தது? SHARE
News November 16, 2025
10.5% இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ்

TN-ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி டிச.12-ல் போராட்டம் நடத்தவுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரிக்கையும் வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.17-ல் அன்புமணி நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம் குறித்து தனக்கு தெரியாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், இப்போராட்டத்தால் தமிழகமே குலுங்கும் என்று பேசியுள்ளார்.
News November 16, 2025
Delhi Blast: காரின் உரிமையாளர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த ஒருவரை NIA கைது செய்துள்ளது. வெடித்த காரின் விவரங்களை கொண்டு NIA விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அதன் உரிமையாளரான அமிர் ரஷித் அலி என்பவர் கைதாகியுள்ளார். இவர் குண்டுவெடிப்புக்கு காரணமான உமர் நபியுடன் இணைந்து தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.


