News April 9, 2024
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அருமருந்து

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் அருமருந்தாக பூண்டு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தினமும் பூண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் உண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் பக்க விளைவுகளைக் காட்டிலும் வெள்ளைப்பூண்டு நல்ல பலனைக் கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பூண்டு உடலுக்கு அதிகம் அளிக்கிறது.
Similar News
News November 5, 2025
DNA சோதனைக்கு ரெடி.. சவால் விட்ட ஜாய் கிரிசில்டா!

தனது குழந்தைக்கு <<18204429>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> தான் தந்தை என்பதை நிரூபிக்க DNA சோதனைக்கு தயார் என ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். தனது குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும், இந்த நிலையிலும் மாதம்பட்டி மனசாட்சி இல்லாமல் பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், மிரட்டி திருமணம் செய்ய மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சின்ன குழந்தையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 5, 2025
மொத்தமாக அரிசிக்கு ‘NO’ சொல்றீங்களா? உஷார்

டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் அரிசியை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், அப்படி செய்வது உடலுக்கு தீங்கானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலும்பு, தசை, மூட்டுகள் சரியாக வேலை செய்ய, உடலுக்கு Glycogen அவசியம். இந்த Glycogen, கார்போஹைட்ரேட்டில் இருந்து தான் கிடைக்கிறது. எளிதில் செரிமானமாகும், கார்போஹைட்ரேட்டை கொடுக்கும் அரிசியை ஒதுக்குவதால், பல பிரச்னைகள் வரலாம். எனவே, கொஞ்சம் அரிசியை சாப்பிடுங்க.
News November 5, 2025
நடிகை கனகாவுக்கு நடந்த துயரம்.. ராமராஜன் உருக்கம்

1990 களில் பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகை கனகா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன போட்டோ இணையத்தில் வெளியானது. அதன் பின்னர், நடிகர் ராமராஜன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கனகா தனது தாயார் நடிகை தேவிகா மரணத்திற்கு பிறகு மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், பழைய நினைவுகளை மறந்துவிட்டதாகவும் உருக்கமாக கூறியுள்ளார். மீண்டு வாருங்கள் கனகா என ரசிகர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.


