News October 25, 2024
நல்லூரில் மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டம் நல்லூரில் உள்ள சாந்தி மஹாலில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலா் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சசிதரன், சம்சத்பேகம், வருவாய் ஆய்வாளர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 4, 2025
கடலூர்: இடி விழுந்து கோயில் சேதம்

கடலூர் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ரெட்டிச்சாவடி அடுத்த ரங்கரெட்டிபாளையம் பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் மீது மின்னல் தாக்கியதில் கோவிலின் சுவர் இடிந்து கீழே விழுந்தது. மேலும் மின் சாதன பொருட்களும் சேதமடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
News December 4, 2025
கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் துடிதுடித்து பலி

விருத்தாசலம் அடுத்த சித்தலூரை சேர்ந்தவர் குமார் மகன் நமச்சிவாயம் (22). இசைக் கலைஞரான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று நமச்சிவாயம் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் துடிதுடித்து பலி

விருத்தாசலம் அடுத்த சித்தலூரை சேர்ந்தவர் குமார் மகன் நமச்சிவாயம் (22). இசைக் கலைஞரான இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள விருத்தாசலம்- ஜெயங்கொண்டம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று நமச்சிவாயம் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


