News October 25, 2024
நல்லூரில் மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம்

கடலூர் மாவட்டம் நல்லூரில் உள்ள சாந்தி மஹாலில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலா் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சசிதரன், சம்சத்பேகம், வருவாய் ஆய்வாளர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 2, 2025
கடலூர்: டிராக்டர் மீது பைக் மோதி பரிதாப பலி

குறிஞ்சிப்பாடி கே.கே.நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). பிளைவுட் கடை வைத்துள்ள இவர் தனது பைக்கில் குறிஞ்சிப்பாடி அண்ணாநகர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
கடலூர்: பைக் மோதி மின்வாரிய ஊழியர் பரிதாப பலி

விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியை சேர்ந்தவர் மின்வாரிய ஊழியர் இளஞ்செழியன் (58). இவர் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் நடந்து சென்றபோது அப்பகுதி வழியாக வந்த பைக் இளஞ்செழியன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.01) இரவு 10 மணி முதல் இன்று (டிச.02) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


