News July 3, 2024
மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா… பின்னணி என்ன?

கோவை, நெல்லை மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில், பிரச்னை குறித்து கட்சி தலைமை விசாரித்தாக கூறப்படுகிறது. கட்சியினர் மற்றும் அதிகாரிகளிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இருவரையும் ராஜினாமா செய்ய திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
Similar News
News September 22, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (செப்.22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News September 22, 2025
GST வரிக்குறைப்பு அமலானது.. விலை குறைகிறது

சமீபத்தில் மத்திய அரசு செய்த GST சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இனி 5%, 18% என 2 வரம்புகள் மட்டுமே. 12%, 28% கிடையாது. இதனால் வெண்ணெய், நெய் போன்ற பால் பொருள்கள், விவசாய பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள், டிவி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருள்கள், சோப்பு, பேஸ்ட், ஹேர் ஆயில், ஆடைகள், சிறிய ரக கார்கள் என ஏறக்குறைய 375 பொருள்களின் விலை குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
News September 22, 2025
மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே

PM மோடியின் <<17784663>>பேச்சை<<>> காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கொண்டுவந்த எளிமையாக ஜிஎஸ்டியை விட்டுவிட்டு மோசமாக வரியை பாஜக அரசு கொண்டு வந்ததாக சாடிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் ₹55 லட்சம் கோடியை வசூலித்துவிட்டு ₹2.5 லட்சம் கோடி மக்கள் சேமிக்கலாம் என பிரதமர் கூறுவதாகவும், பெரிய காயத்துக்கு சிறிய பேண்ட்-எய்ட் போட்டுள்ள மோடி அரசு, இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கார்கே கோரியுள்ளார்.