News March 2, 2025
மருமகனின் கட்சிப் பதவியைப் பறித்தார் மாயாவதி

தேசிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் மருமகன் ஆகாஷ் ஆனந்தை பிஎஸ்பி தலைவர் மாயாவதி நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக அந்த இடத்தில் ஆகாஷின் தந்தை ஆனந்த் குமார், கட்சி மூத்தத் தலைவர் ராம்ஜி கெளதமை அவர் நியமித்துள்ளார். மாயாவதிக்கு பிறகு கட்சியின் முகமாக ஆகாஷ் பார்க்கப்பட்டார். அவரிடம் இருந்து கட்சிப் பதவியை மாயாவதி பறிப்பது இந்தாண்டில் இது 2ஆவது முறையாகும்.
Similar News
News April 11, 2026
என்ன செய்கிறார் மாநிலத் தலைவர் நயினார்?

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை, கமலாலயம், டெல்லி தலைமை அலுவலகம், பேட்டிகள் என விறுவிறுப்பாக இயங்கிவந்தார் நயினார். ஆனால், பட்டியல் வெளியான பிறகு, போட்டியிடும் சாத்தூர் தொகுதியிலேயே வாக்கு சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, நெல்லை, குமரியில் கட்சி கூட்டங்களில் மட்டும் பங்கேற்றுள்ளார். ஒரு மாநிலத் தலைவரின் இந்த சைலண்ட் பயணம், அரசியல் கவனம் பெற்றுள்ளது.
News April 11, 2026
திமுகவில் இருந்து அடுத்த விலகல்.. ஸ்டாலின் அதிர்ச்சி!

மனோஜ் பாண்டியன் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேஷ்மாயவன் விலகியுள்ளார். ஆலங்குளம் பிரசார களத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், திமுக நிர்வாகிகள் மனோஜ் பாண்டியன் மதிப்பதில்லை என்பதால் சுயமரியாதையின்றி இங்குப் பயணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே <<19563851>>வேலூர்<<>>, கோவையிலும் திமுக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகினர்.
News April 11, 2026
₹56,100 சம்பளம், 243 பணியிடங்கள்.. Apply Now

தேசிய தகவலியல் மையத்தில் 243 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கணினி அறிவியல் & தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல் & செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பணிகளுக்கு B.E/ B.Tech கல்வித்தகுதியுடன், GATE மதிப்பெண் அவசியமாகும். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த <


