News May 24, 2024
மே 24 வரலாற்றில் இன்று!

➤1218 – ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். ➤1738 – ஜோன் உவெஸ்லி மெதடிசம் மத இயக்கத்தை தோற்றுவித்தார். ➤1883 – நியூயோர்க்கில் புரூக்ளின் பாலம் மக்கள் பயன்பட்டிற்குத் திறக்கப்பட்டது. ➤1993 – எத் தியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை பெற்றது. ➤2000 – நோர்வே தூதரகம் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியது. ➤2021 – மார்க்சிய சிந்தனையாளர் எஸ்.என்.நாகராசன் மறைந்த நாள்.
Similar News
News August 16, 2025
போர்களின்போது பாலியல் துன்புறுத்தல்கள் 25% அதிகரிப்பு

மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக செத்து வருவதற்கு இந்த அறிக்கையே சாட்சி. கடந்த ஆண்டில் நடைபெற்ற போர்கள் & உள்நாட்டு மோதல்களின்போது சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் 25% அதிகரித்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. இதில் 63 அரசு & NGO அமைப்புகளுக்கு தொடர்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடுமைகள் காங்கோ, சோமாலியா, தெற்கு சூடான், ஆப்பிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் அரங்கேறியுள்ளன.
News August 16, 2025
BREAKING: ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்

PM மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
SRH அணியில் பாண்ட்யா..? பதான் சொன்ன ரகசியம்

SRH ஆலோசகராக VVS லக்ஷ்மன் இருந்தபோதே, பாண்ட்யாவின் திறமையை கூறி அணியில் எடுக்க சொன்னதாக பதான் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், பாண்டியாவின் திறமை குறித்து வெளியில் அதிகம் பேசப்படாததால், அவரை லக்ஷ்மன் அணியில் எடுக்கவில்லை எனவும், அதற்காக தற்போது வரை அவர் புலம்பி வருவதாகவும் பதான் பகிர்ந்துள்ளார். 2015-ல் ₹10 லட்சத்திற்கு MI-ஆல் வாங்கப்பட்ட பாண்டியா, தற்போது அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.