News May 7, 2025

மேக்ஸ்வெல் IPL-ல் இருந்து வெளியேறினார்

image

PBKS வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். அவருக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஐயர் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் அந்த அணி இன்னும் தேர்வு செய்யவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 10, 2025

இன்று முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்..

image

தமிழகத்தில் இன்று முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இன்று தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST

News December 10, 2025

விஜய்க்கு சரியாக சொல்லி கொடுக்கவில்லை: நமச்சிவாயம்

image

புதுச்சேரியில் நேற்றைய மக்கள் சந்திப்பின் போது, அங்கு ரேஷன் கடைகளே இல்லை என விஜய் பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. அங்கு, 2016-ல் தற்காலிகமாக மூடப்பட்ட ரேஷன் கடைகள், 2024 முதல் செயல்பட்டு வருவதை குறிப்பிட்டு, நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். அதேபோல், அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், விஜய்க்கு சொல்லி கொடுத்தவர்கள் சரியாக சொல்லி கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

News December 10, 2025

8 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்

image

தமிழகத்தில் காலை 7 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD அறிவித்துள்ளது. அதன்படி, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 15-ம் தேதி வரை மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!