News April 9, 2024
தமிழகத்தில் அதிகபட்ச வெயில் பதிவு

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக இன்று திருப்பத்தூர் – 41.6 டிகிரி செல்சியஸ்(dC), ஈரோடு – 40 dC, சேலம் – 39.1 dC, கரூர் பரமத்தி – 39 dC,நாமக்கல் – 38.5 dC, வேலூர் – 38.4 dC, பாளையங்கோட்டை – 38 dC, தருமபுரி – 38.2 dC, மதுரை ஏர்போர்ட் – 38.4 dC, திருத்தணி – 37.7 dC வெப்பம் பதிவாகியுள்ளது.
Similar News
News March 24, 2026
திமுகவுக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள்: செல்லூர் ராஜு

தேர்தல் கண்காணிப்பு குழுவில் திமுக தங்களுக்கு சாதகமான அதிகாரிகளை நியமித்துள்ளதாக செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார். எந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்ற பட்டியலை எடுத்து வருவதாகவும், அதை EPS மூலம் ECI-யிடம் கொடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கெனவே தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்பிருப்பதாக மதுரை ஆட்சியர் மற்றும் ஆணையரை இடமாற்றம் செய்யக்கோரி பாஜகவினர் ECI-யிடம் மனு அளித்துள்ளனர்.
News March 24, 2026
DCM உதயநிதி காரில் சோதனை

கரூரில் இருந்து திண்டுக்கல் சென்ற DCM உதயநிதி காரை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். திண்டுக்கல்லில் இளைஞர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றபோது வேடசந்தூரை அடுத்த கல்வார்பட்டி சோதனை சாவடியில் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் காவல்துறையினர் உதவியோடு தேர்தல் கண்காணிப்பு குழு தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News March 24, 2026
ராஜ்யசபா சீட்டை குறிவைக்கும் விசிக

திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் விசிக உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி இலக்கு குறித்த தீர்மானம் கவனம் பெற்றுள்ளது. அதன்படி வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும், 2028-ல் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட்டும் விசிக பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். விசிகவின் இரட்டை இலக்க சீட் ஆசை நிறைவேறுமா?


