News March 1, 2025

அதிகபட்சம் 8 செ.மீ. மழை

image

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் 7 செ.மீ., திருவாரூர், நாகை தலா 6 செ.மீ., செங்கோட்டை, தங்கச்சிமடம், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Similar News

News March 1, 2025

இங்கிலாந்து அணி பேட்டிங்

image

சாம்பியன்ஸ் டிராஃபி ODI தொடரில் இன்று, இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. கராச்சி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ENG அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த ENG அணி, தொடரிலிருந்து ஏற்கெனவே வெளியேறியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ENG அணி ரசிகர்கள் உள்ளனர்.

News March 1, 2025

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

image

நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதனால் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

News March 1, 2025

பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த CM ஸ்டாலின்

image

CM ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என 3 முறை முழக்கமிட்டு திமுகவினர் உறுதிமொழி எடுத்தனர். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்பதே ஒரே இலக்கு, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

error: Content is protected !!