News May 16, 2024
தமிழகத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 10.3 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறையில் 5.1 செ.மீ., அருப்புக்கோட்டையில் 5 செ.மீ., மதுரையில் 4.7 செ.மீ., நாமக்கல், நாகை மாவட்டம் கொள்ளிடம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் 3 செ.மீ., என மழை பதிவாகியிருக்கிறது. கோவை, குமரி, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் குறிப்பிடும்படியான மழை பெய்திருக்கிறது.
Similar News
News December 7, 2025
லோகியின் அடுத்த குக்கிங்.. ஆமிர் கான் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆமிர் கான் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. இந்நிலையில், தான் லோகேஷுடன் பேசி வருவதை ஆமிர் உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பு லோகியுடன் பேசியதாகவும், விரைவில் மும்பையில் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது வரை தற்காலிகமாக லோகியின் டைரக்ஷனில் கமிட்டாகியுள்ளதாக ஆமிர் ஹிண்ட் கொடுத்துள்ளார். லோகேஷ் – ஆமிர் காம்போ எப்படி இருக்கும்?
News December 7, 2025
அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது: DCM

அமித்ஷாவுக்கு எதிராக எந்த கருத்தும் கூறமுடியாத நிலைக்கு EPS தள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார். அதிமுக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல என்ற அவர், அது அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகமாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை; சொல்லப்போனால் அதிமுகவே இல்லை எனவும் சாடியுள்ளார்.
News December 7, 2025
உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

USA குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறிய சில மணிநேரங்களில், உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. 653 ஆளில்லா விமானங்கள், 51 ஏவுகணைகள் மூலம் 700-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் மின்நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அணுமின் நிலையத்தின் மின்சாரம் துண்டிப்பு, உலை பாதுகாப்பிற்கான கவலையை எழுப்பியுள்ளது.


