News May 16, 2024
தமிழகத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 10.3 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறையில் 5.1 செ.மீ., அருப்புக்கோட்டையில் 5 செ.மீ., மதுரையில் 4.7 செ.மீ., நாமக்கல், நாகை மாவட்டம் கொள்ளிடம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் 3 செ.மீ., என மழை பதிவாகியிருக்கிறது. கோவை, குமரி, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் குறிப்பிடும்படியான மழை பெய்திருக்கிறது.
Similar News
News December 10, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு தமிழக அரசு ‘தந்தை பெரியார் விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டத்தில் சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது சுய விவரம், முகவரி மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட விபரங்களை வரும் டிச.18-க்குள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
மீண்டும் இணைகிறாரா ஓபிஎஸ்? இன்று காலை முடிவு

TTV, OPS-ஐ மீண்டும் NDA கூட்டணிக்குள் கொண்டுவரும் பணி வேகமெடுத்துள்ளது. TTV, OPS-ஐ தனித்தனியாக சந்தித்து பேசிவிட்டு, டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, அமித்ஷாவிடம் ரிப்போர்ட்டை கொடுத்து ஆலோசித்துள்ளார். இதன்பின் இருவரையும் கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக தலைமை இபிஎஸ்ஸிடம் பேசியதாகவும், இன்று காலை அதிமுக பொதுக்குழுவுக்கு பின் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
News December 10, 2025
ஒழுங்கற்ற மாதவிடாயா? 14 நாள்களில் தீர்வு!

பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் பிரச்னையால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விலக பின்வரும் விதைகளை நீங்கள் சாப்பிட்டாலே போதும். மாதவிடாய் முடிந்த பிறகு 14 நாட்கள் சூரியகாந்தி, எள் விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு வரும் 14 நாட்கள் பூசணி, ஆளி விதைகளை சாப்பிடவும். இது உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீர் செய்யும் என டாக்டர்கள் சொல்றாங்க. பல பெண்களுக்கு பயனளிக்கும், SHARE THIS.


