News May 16, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ., மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 10.3 செ.மீ., மழை பதிவாகியிருக்கிறது. மயிலாடுதுறையில் 5.1 செ.மீ., அருப்புக்கோட்டையில் 5 செ.மீ., மதுரையில் 4.7 செ.மீ., நாமக்கல், நாகை மாவட்டம் கொள்ளிடம், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் 3 செ.மீ., என மழை பதிவாகியிருக்கிறது. கோவை, குமரி, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் குறிப்பிடும்படியான மழை பெய்திருக்கிறது.

Similar News

News December 6, 2025

எடையை குறைக்க உதவும் ‘கொத்தமல்லி’

image

சமையலில் மணம், சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கொத்தமல்லி விதையில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. *கொத்தமல்லி இலையில் உள்ள குவர்செடின் எனும் வேதிப்பொருள் பசியை கட்டுப்படுத்தி, கலோரிகளை எரிக்கிறது. *இதை தினமும் உணவில் சேர்த்தால், உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது *இதயம், தோல், மூளைக்கும் நல்லது.

News December 6, 2025

புயல் மீண்டும் உருவாகிறது.. கனமழை பொளந்து கட்டும்

image

டிட்வா புயலின் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வருகிறது. இந்நிலையில், டிச.12 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், டிச.15-ம் தேதிக்கு பிறகு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது புயலாக மாறக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதனால், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 6, 2025

பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

image

தமிழக விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ONGC தளவாடங்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், திருவாரூர் மாவட்ட கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 2015-ல் ONGC நிறுவனத்திற்கு எதிராக போராடியபோது, பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

error: Content is protected !!