News April 12, 2024
நாளை முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்

நாளை முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 10 ரூபாய்க்கு லைட்டர் கிடைப்பதால் தீப்பெட்டி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் 10 நாள்கள் வேலை நிறுத்தம் செய்து அரசுக்கு கண்டனத்தை அவர்கள் பதிவு செய்யவுள்ளனர். சிவகாசி, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த தொழிலை நம்பி பல குடும்பங்கள் இருக்கின்றன.
Similar News
News July 6, 2025
ஆண்களை பாதிக்கும் லேப்டாப், பைக்: டாக்டர் கூறும் அட்வைஸ்

ஆண்கள் நீண்ட நேரம் மடியில் வைத்து மடிக்கணினி(Laptop) பயன்படுத்துவது விந்து பைகளை பாதிக்கும் என பாலியல் சிகிச்சை நிபுணர் காமராஜ் எச்சரித்துள்ளார். மேலும், இருசக்கர வாகனங்களை 1 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து ஓட்டக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அனைவரும் உணவு, உணர்வு, உடற்பயிற்சி, உறக்கம், உடலுறவு ஆகியவற்றில் சீரான கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். PLEASE TAKE CARE BOSS..!
News July 6, 2025
கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. தாய்க்கும் மீன்கள் நல்ல ஊட்டச் சத்துகளை வழங்கும். அதே நேரம் பாதரச அளவுகள் குறைவாக உள்ள மீன்களையே தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நெத்திலி, சால்மன், மத்தி, லைட் சூரை, வெங்கணா போன்ற மீன்கள் தாய்க்கும் சேய்க்கும் சிறந்ததாக இருக்கும் என்கிறார்கள். எனவே டாக்டரிடம் ஆலோசனை பெற்ற பின் சாப்பிடவும்.
News July 6, 2025
அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கமா?

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை கடுமையாக விமர்சித்ததால் அதிமுகவிலிருந்து <<16962233>>அன்வர் ராஜா<<>>வை இபிஎஸ் நீக்கினார். அதன்பின் இபிஎஸ்ஸிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அண்மையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது மீண்டும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததை கடுமையாக சாடியிருக்கிறார். இதனால், அவர் மீது இபிஎஸ் நடவடிக்கை ( கட்சியில் இருந்து நீக்கம்) எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.