News April 13, 2024
இன்று முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்தம்

இன்று முதல் ஏப்ரல் 22ம் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பிளாஸ்டிக் லைட்டர்களினால் இத்தொழில் மிகவும் நலிவுற்று தொடர்ந்து நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு, தற்காலிக தீர்வு காணும் பொருட்டு உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உற்பத்தியாகும் தீப்பெட்டியில் 90% தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 16, 2026
இங்கு ஆண்களுக்கு முற்றிலும் தடை

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம், நல்ல சினாரியோவ ரசிக்கலாம், ஆனா நம்ம மட்டும் தான் அங்க இருக்கணும் என்ற நினைப்பில் உள்ள பெண்களுக்கான பிரத்யேக இடம்தான் இந்த சூப்பர்ஷி தீவு. பின்லாந்தில் உள்ள இந்த தீவில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. ஆண்களுக்கு தடை தான். எனவே, பெண்கள் தங்களை தாங்களே உணர்ந்துகொண்டு விரும்பிய உணவுகளை சாப்பிட்டபடியே பொழுதை கழிக்கலாம். யாரெல்லாம் ரெடியா இருக்கீங்க?
News January 16, 2026
வீடு வாங்க போறீங்களா? Must Read this

மத்திய பட்ஜெட் 2026-ல் மலிவு விலை வீடுகள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை ரியல் எஸ்டேட் துறையினர் முன்வைத்துள்ளனர். தற்போதைய ₹45 லட்சமாக உள்ள மலிவு விலை வீடுகளின் வரம்பை ₹75-₹95 லட்சமாக உயர்த்த வேண்டும், வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். மேலும், வீட்டுக் கடன் மீதான வட்டி விலக்கை, ₹5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
News January 16, 2026
தான் இசையமைத்த படத்தை விமர்சித்த AR ரகுமான்

ஒரு கலைஞராக, தீய நோக்கங்களுடன் உருவாக்கப்படும் திரைப்படங்களைத் தவிர்க்க முயற்சிப்பதாக AR ரஹ்மான் கூறியுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய சாவா படத்திற்கு அவர் இசையமைத்து பேசுபொருளானது. இந்நிலையில், அது பிரிவினை பேசும் படம் தான். அதனை பேசி தான் பணம் சம்பாதித்தது என ஓபனாக விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் புத்திசாலிகள், படங்களில் எது உண்மை, எது பொய் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.


