News April 2, 2025
ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.
Similar News
News November 24, 2025
இது தெரியாமல் Loan வாங்காதீங்க..

சொந்த வீடு கட்ட வங்கியில் Home Loan வாங்க திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு சாதகமாக, 2025-ல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.50%லிருந்து 5.50%-ஆக குறைத்ததால், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. அதன்படி, Home Loan-க்கு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். SHARE.
News November 24, 2025
இனி 2.30 மணி நேரத்தில் சென்னை TO ஹைதராபாத்!

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்ல 12 மணி நேரமாவதால், நேர விரயம், பயண களைப்பு என தவிக்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ். இனி 2.30 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம் என்ற நம்ப முடிகிறதா? ஆம், சென்னை – ஹைதராபாத் இடையேயான 778 கி.மீ., புல்லட் ரயில் திட்டத்தின் அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு TN அரசு ஒப்புதல் வழங்கினால், இம்மாத இறுதிக்குள் DPR இறுதி செய்யப்படும்.
News November 24, 2025
திமுக உடன் கூட்டணி முறிவு.. ஏன்?

சிறிய கட்சிகளை மதிக்காததால் தான் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக ஃபார்வர்டு பிளாக் கதிரவன் விளக்கமளித்துள்ளார். திமுக பெரிய கட்சிகளையும் பணத்தை வைத்து அடிமைப்படுத்துவதாக கூறிய அவர், பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனியாக அக்கட்சி மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், 2021 தேர்தலில் கட்டாயப்படுத்தி சூரியன் சின்னத்தில் நிற்கவைத்ததாகவும் கூறியுள்ளார்.


