News April 2, 2025

ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

image

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.

Similar News

News November 26, 2025

பணமழை கொட்டப் போகும் 3 ராசிகள்

image

வரும் டிச.7, 25 தேதிகளில் நடைபெறவுள்ள செவ்வாய் பெயர்ச்சிகளால் பின்வரும் 3 ராசிக்காரர்கள் அதிக நன்மைகள் பெறுவர் எனக் கணிக்கப்படுகிறது *கன்னி: நிதிச்சிக்கல்கள் குறையும், முதலீடு லாபம் தரும். *மகரம்: புதிய சொத்துகள் வாங்கும் யோகம் தொடங்கும், நிதிச்சிக்கல்கள் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கும்பம்: டிசம்பர் மகிழ்ச்சிகரமான மாதமாக அமையும். தம்பதிகள் உறவு மேம்படும். வெற்றியும் லாபமும் கிட்டும்.

News November 26, 2025

6,000 பேரை பணிநீக்கம் செய்யும் HP

image

AI-ன் வரவால் பல டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில், 2028-க்குள் 4,000 முதல் 6,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக HP தெரிவித்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே AI எவ்வாறு பணியாற்றும் என்பதை ஆய்வு செய்து வந்ததாகவும், இந்த பணிநீக்கத்தின் மூலம் நிறுவனம் ₹8,926 கோடியை சேமிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், இது நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும் தெரிவித்துள்ளது.

News November 26, 2025

விஜய் இதயம் நொறுங்கி போயிருந்தார்: ஷ்யாம்

image

விஜய்க்கு தினமும் மெசேஜ் செய்து, வாரத்திற்கு ஒரு முறையாவது பேசிவிடுவேன் என ஷ்யாம் தெரிவித்துள்ளார். ஆனால், கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய்யை 5 நாள்களுக்கு மேலாக தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும், அந்தளவிற்கு அவர் இதயம் நொறுங்கி போயிருந்ததாகவும் ஷ்யாம் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அவரது வாழ்க்கையில் மிகவும் வலி நிறைந்த கட்டத்தை விஜய் கடந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!