News April 2, 2025

ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

image

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.

Similar News

News December 1, 2025

காலையில் கல்யாணம்.. மாலையில் விவாகரத்து!

image

உ.பி.,யில் சொந்த பந்தங்களின் ஆரவாரத்தில் பூஜா – விஷால் என்ற தம்பதிகளுக்கு நவம்பர் 26-ம் தேதி காலை திருமணம் நடந்துள்ளது. புகுந்த வீட்டுக்கு சென்ற 20 நிமிடத்திலேயே, என்ன காரணம் என கூறாமல் இந்த திருமணம் பிடிக்கவில்லை என பூஜா விடாப்பிடியாக கூறியுள்ளார். ஊராரை கூட்டி, 5 மணி நேரமாக பேசி பார்த்தும் பூஜா மனம் மாறாததால், விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் விஷால்.

News December 1, 2025

லோக்சபாவில் 3 மசோதாக்கள் அறிமுகம்

image

வாக்கு திருட்டு மற்றும் SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், லோக்சபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூர் ஜிஎஸ்டி 2-வது திருத்த மசோதா, <<18433013>>மத்திய கலால் வரி திருத்த மசோதா<<>> உள்ளிட்ட 3 மசோதாக்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் அறிமுகம் செய்தார்.

News December 1, 2025

உடனடியாக நிவாரணம் வழங்க CM ஸ்டாலின் உத்தரவு

image

டிட்வா புயலால் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் நடைபெறும் பணிகளை தொடந்து கண்காணித்து வருதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் மாதம் பெய்த மழையால் 33% மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் 4,235 ஹெக்டேர் வேளாண் பயிர்கள், 345 ஹெக்டேர் தோட்ட கலை பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!