News April 2, 2025

ஏப்ரல் 8இல் விலை உயர்வு.. தேதி குறித்த மாருதி சுசூகி

image

கார்களின் விலையை வரும் 8ஆம் தேதி உயர்த்த இருப்பதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி பிப்ரவரியில் விலையை மாருதி சுசூகி உயர்த்தியது. இதே காரணத்திற்காக பிராங்ஸ் மாடல் கார் விலை ரூ.2,500, டிசைர் எஸ் விலை ரூ.3,000, XL6, எர்டிகா விலை ரூ. 12,500, வேகன் ஆர் விலை ரூ.14,000, இகோ விலை ரூ.22,500, கிரான்ட் விடாரா விலை ரூ.62,000 என உயர்த்த இருப்பதாக கூறியுள்ளது.

Similar News

News November 24, 2025

BREAKING: வால்பாறை மாணவி உயிரிழப்பு.. அதிரடி நடவடிக்கை

image

வால்பாறையில் சில நாள்களுக்கு முன் பள்ளி மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில், பெற்றோர் புகாரின் பேரில் 3 ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாணவி வீடியோ வாக்குமூலத்தில் ஆசிரியைகள் துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து ரமணிபாய், சிந்தியா, ஷியாமளா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

News November 24, 2025

நாளை பள்ளிகள் விடுமுறையா? கலெக்டர்களுக்கு உத்தரவு

image

தமிழகத்தில் 3 நாள்கள் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலெக்டர்களுக்கு முக்கிய உத்தரவு பறந்துள்ளது. டெல்டா & தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. நேற்று இதேபோல் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. SHARE IT.

News November 24, 2025

உரிய நேரத்தில் கூட்டணி பற்றி அறிவிப்போம்: பிரேமலதா

image

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக முத்திரை பதிக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான <<18372669>>கூட்டணி<<>> முறிந்து போனதாக கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்திருந்த அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். தேமுதிக இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!